மக்களுக்கு ஒரு வேலையும் செய்யாத அதிகாரிகள் தனியார் நிறுவனத்துக்கு பணத்துக்கு துணை போகும் அரசு அதிகாரிகள்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம் பெருவாயல் கிராமத்தில் உள்ள புத்தேரியில் மகேந்திரா என்ற தனியார் நிறுவனம் தன்னுடைய பயன்பாட்டிற்காக அந்த ஏரியின் குறுக்கே பாலம் அமைக்கிறது இதனால் ஏரியின் நீர் வளம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது மற்றும் பாலம் அமைப்பதற்காக ஏரியின் மண் அதிக அளவு தோண்டப்பட்டு கான்கிரீட் தரை ஏரியின் உள்ளே அமைக்கப்படுகிறது இதனால் ஏரியின் உறிஞ்சும் தன்மை பாதிக்கப்படுகிறது மற்றும் அந்த மகேந்திரா என்ற நிறுவனம் ஏரியின் அருகே ராட்சத போர் அமைத்து அதிகப்படியான நீரை உறிஞ்சுகிறது எனவே நிலத்தடி நீர் பெரிதும் பாதிக்கப்படும். வருங்காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது எனவே தமிழ்நாடு அரசு இந்த ஏரிக்கு ஆபத்து ஏற்படுத்தும் பாலம் கட்டும் பணியினை உடனே தடுத்து நிறுத்தவேண்டும் சாலை அமைக்க மாற்று வழி இருந்தும் அவர்கள் எங்கள் வளங்களை அழிக்கும் உள்நோக்கத்துடன் ஏரியின் உள்ளே பாலம் கட்டுகிறார்கள் எனவே தமிழ்நாடு அரசு விரைந்து இதை தடுத்திட வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.