தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் 21ஆம் ஆண்டு மகாசிவராத்திரி விழா அழைப்பிதழ்


தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் 21ஆம் ஆண்டு மகாசிவராத்திரி விழா அழைப்பிதழ் வணக்கம் வருகின்ற சனிக்கிழமை 18/2/2023. மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை மகா சனி பிரதோஷமும் அதை தொடர்ந்து இரவு மகாசிவராத்திரி நான்குகால பூஜை அதாவது முதல் கால பூஜை இரவு 10.00 மணிக்கும் இரண்டாம் கால பூஜை 12.00 மணிக்கும் மூன்றாம் கால பூஜை 2.00 மணிக்கும் நான்காம் கால பூஜை 4(நான்கு மணிக்கு பிரம்ம முகூர்த்த பூஜை அதாவது சித்தர்களும் முனிவர்களும் ரிசிகளும், மகான்களும் மலைக்கோயிலுக்கு கைலாசநாதசிவபெருமானை சூட்ச்சமமாக தரிசனம் செய்வார்கள் அந்த புனிதமான நேரத்தில் நமது கோயிலில் சிறப்பாக அபிஷேகம் நடைபெறும் இந்த சிறப்பான நிகழ்ச்சி நல்லதை எண்ண வைத்து அதையும் நடத்தி வைக்கின்ற புண்ணியஇடமான கைலாசநாதர் மலைக்கோயிலில் நடைபெற இருக்கிறது பக்தகோடிகள் அனைவரும் இந்த நான்குகால  அபிஷேக அலங்கார பூஜை தீபாராதனையில் கலந்துகொண்டு இறையருள் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம் குறிப்பு இரவு 8.00 மணி முதல் அன்னதானமும் ஒவ்வொரு கால பூஜை முடிந்தவுடன் பிரசாதமும், சுக்கு மல்லி காபியும் வழங்கபடும் இரவு முழுவதும் கூட்டு வழி பாடும், பஜனைகள், தேவாரம் திருவாசகம் பாடுதல், ஆன்மீக சொற்பொழிவு, மற்றும் பக்தர்களுக்கு கைலாசநாதர்பூஜையில் வைத்த ஐந்துமுகம் கொண்ட ருத்ராட்சம் அனைவருக்கும் வழங்கப்படும் அனைத்துவிதமான வசதிகளையும் வருகின்ற பக்தர்களுக்கு செய்து தரப்படும் இறையருள் பெற வருகைதரும் பக்தகோடிகளை வரவேற்கும்  அன்பர் பணிசெய்யும் பராமரிப்பு குழு மற்றும் கோயில் நிர்வாகம்சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post