தேனி பெரியகுளம் வீட்டில் பாலியல் தொழில் இரண்டு பெண்கள் மூன்று இளைஞர் கைது காவல்துறை தீவிர விசாரணை.!!

தேனி பெரியகுளம் வீட்டில்  பாலியல் தொழில் இரண்டு பெண்கள் மூன்று இளைஞர்  கைது காவல்துறை தீவிர விசாரணை.!!
பிப்:11
ஆவணம்:1
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா
9655331932



தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட அழகர்சாமிபுரம் பகுதியில் உள்ள வீட்டில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக  பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் இன்று  தகவல் அறிந்து அழகர்சாமிபுரம் பகுதியில் காவல் ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு பெண்கள் மூன்று ஆண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது  தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து    பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண்கள் மூன்று இளைஞர்  என ஐந்து பேரையும் பெரியகுளம் காவல் நிலையம் அழைத்துச் சென்று பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். மேலும்


        பெரியகுளத்தில் வேறு எங்கும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்களா என்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களிடம்   விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . மேலும் பாலியல் தொழில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்  தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நபர்கள் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்........
Previous Post Next Post