தேனி அருகே காமாட்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 319 பயனாளிகளுக்கு ரூ 1261751 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தேனி மாவட்ட ஆட்சியர் வழங்கி சிறப்பித்தார்.

தேனி அருகே காமாட்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 319 பயனாளிகளுக்கு ரூ 1261751 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தேனி மாவட்ட ஆட்சியர் வழங்கி சிறப்பித்தார். 
பிப்:22
ஆவணம்:1
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா




தேனி மாவட்டம்  உத்தமபாளையம் வட்டாரத்துக்கு உட்பட்ட காமாட்சிபுரத்தில் வட்டார அளவிலான மக்கள் தொடர்பு முகாம் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் சஜீவனா தலைமையில் நடைபெற்றது.

இந்த மக்கள் தொடர்பு முகாமில் சுகாதாரத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையர் நலத்துறை மற்றும் அரசுத்துறை சார்ந்த துறையின் மூலம் 319 பயனாளிகளுக்கு ரூ 1261751 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் வழங்கி சிறப்பித்தார். 

மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் தண்டபாணி, உத்தமபாளையம் கோட்ட பொறுப்பாளர் பால் பாண்டி, தாசில்தார் சந்திரசேகர், வேளாண்மை இணை இயக்குனர் செந்தில்குமார் , சுகாதாரத் துறை இணை இயக்குனர் போஸ்கோ ராஜா,சமூக நலத்துறை அலுவலர்கள், வேளாண்மை துறை அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் பயனாளிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
Previous Post Next Post