தே மோர் கரைசல் பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

தே மோர் கரைசல்  பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்


நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் புதூர் கிராமத்தில் பி. ஜி. பி. வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் தே- மோர் கரைசல் பற்றி விரவரித்தனர். அவற்றின் பயன்கள், தேவைகளை குறித்து சிறந்த முறையில் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். தே-மோர் கரைசல் எனப்படும் தேங்காய் மற்றும் மோர் கரைசலை பூக்கள் மற்றும் காய்கறி பயிர்களின் மேல் பயன்படுத்துவது மூலம் பூ இன்மையை குறைக்கலாம். செடிகள் நன்கு வளர்ந்த நிலையில் இருக்கும், மகசூல் கிடைக்கும், ஊட்டச்சத்துக்கள் மேன்படும். தேங்காய்ப் மற்றும் மோர் கொண்டு செய்யப்படுவதால் ரசாயனங்கள் எதுவும் இல்லை. இந்த கரைசல் இயற்கை வேளாண்மயில் பெரிதும் பயன்படுகிறது. 10 நாட்களில் கரைசல் தயாரிப்பு முடியும் என்பதால் எளிய முறையில் செய்யப்படுதல் கூடும். இந்த கரைசல் வீட்டுத் தோட்டம் மற்றும் மாடித் தோட்டத்தில் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு பயன் தரும் தே- மோர் கரைசலை செய்முறை மூலம் விவசாயிகளுக்கு தெளிவுரைத்தனர். இதன் பயன் கருதி பயன் படுத்தி ரசாயனங்கள் அற்ற நிலையில் விவசாயம் செய்து மண் மற்றும் உடல் நலம் காப்போம்.
Previous Post Next Post