தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்ற அதிமுக முன்னால் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமராஜ் அவர்களின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை .....

தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்ற அதிமுக முன்னால் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமராஜ் அவர்களின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை .....
 
ஜன-23
ஆவணம்: 1
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா
9655331932


    தேனி மாவட்டம் கூடலூர் அதிமுகவைச் சேர்ந்த கூடலூர்  நகராட்சி முன்னாள் சேர்மன் அருண்குமார் அவர்களின் மகளுக்கும் போடி சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமராஜ் அவர்களின் மகனுக்கும் திருமண நிகழ்வு  இன்று தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள நடராஜான்  திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக  
முன்னாள் முதல்வரும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு திருமண வீட்டார் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது . இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  கம்பம் நகருக்கு வருகை புரிந்தார். 


   காலை 4.30 மணிக்கு சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு திண்டுக்கல்- வத்தலகுண்டு வழியாக தேனி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார்.  காலை 7.30 மணிக்கு தேனி மாவட்டம் அன்னஞ்சி புறவழிச்சாலை பிரிவு பாலாஜிபவன் ஹோட்டல் அருகில் அதிமுகவினர் மிகப்பிரமாண்டமான முறையில்  வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு தேனி புறவழிச்சாலை வழியாக நேராக கம்பம் நடராஜன் திருமண மண்டபத்திற்கு காலை 9.30 மணிக்கு வருகை புரிந்து மணமக்களை வாழ்த்தி திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில்  முன்னால் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார்,  ராஜேந்திர பாலாஜி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு உள்ளிட்டோரும், அதிமுக இதர நிர்வாகிகளும்  கலந்து கொண்டனர்.

  கம்பம் நகருக்கு வருகை புரந்த முன்னால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக பிரம்மாண்டமாக கம்பம் நகரில் வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.......
Previous Post Next Post