மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத ஊராட்சி மன்ற தலைவர்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட பாலவாக்கம் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நிலத்தடி குடிநீர்  பராமரிப்பு இல்லாத காரணத்தால் அக்கிராம மக்கள் பெரும் நோய் தொற்று காய்ச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதன் மூலம் வயிற்றுப்போக்கு, டைய்ப்பாய்டு,தோல் நோய் போன்ற நோய்கள் வருகின்றன. இதை அந்த கிராம ஊராட்சி மன்ற  தலைவர். திரு. குமரவேல் அவரிடம் பலமுறை கூறியும் இதனை செவி சாய்க்காமல் அலட்சியமாக இருப்பதானால் அக்கிராம மக்கள் பெரும் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.மேலும்  தெரு விளக்குகள், கால்வாய் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
 நூலகம் பல ஆண்டுகளாக பராமரிப்பற்று இயங்காமல் இருக்கிறது.
கடந்த 4 கிராம சபை கூட்டங்கள் முறையாக நடைபெறுவதில்லை. கிராம சபை கூட்டத்தில் வைக்கப்படும் தீர்மானங்கள் செயல்படுத்துவதில்லை. கூட்டத்தின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதில் அளிப்பதில்லை மற்றும் முறையான செலவு ஆவணங்களை காட்டுவதில்லை.எனவே இந்த கோரிக்கைகளை ஏற்று தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கு கிராம இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்
Previous Post Next Post