உத்தமபாளையம் அருகே உள்ள ஞீ அனுமந்தராய பெருமாள் கோவில் அருகே தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கிரேன் கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு......
ஜன-24
ஆவணம்:1
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி ஞீ அனுமந்தராய பெருமாள் கோவில் அருகே தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மதுரை கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்காக ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. குழாய்களை தூக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை விபத்தின் காரணமாக திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைப்பட்டது.
தகவல் அறிந்து வந்த உத்தமபாளையம் காவல் நிலைய போலீசார் போக்குவரத்தை ஒழுங்கு செய்து விபத்துக்குள்ளான கிரேன் வேறு ஒரு கிரேனை வரவழைக்கப்பட்டு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.