ஓடைப்பட்டியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை (கூலிப்) பொருள் பறிமுதல்.....
ஜன-24
ஆவணம்: 3
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா ஓடைப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட காமாட்சிபுரம் பேருந்து நிறுத்தத்தில் ஓடைப்பட்டி காவல் துறையினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது TN07 R 2745 என்ற மாருதி காரில் வந்தவர்களை சோதனை செய்தனர் அப்போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
சந்தேகம் அடைந்த போலீசார் ஓடைப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வாகனத்தை முழுமையாக சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட புகையிலை கூலிப் என்ற புகையிலை பொருள் காரில் இருப்பதை கண்டறிந்தனர். அதனை அடுத்து அவர்களை விசாரணை செய்ததில் ஓடைப்பட்டி சாவடி தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருளை கூலிப் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கூறினார்.
அங்கே இருந்து தான் வாங்கி சென்றதாக தகவல் கூறியதை அடுத்து ஓடைப்பட்டி சாவடித்தெருவில் கார்த்திக் வீட்டிற்கு சோதனை மேற்க்கொள்ளச் சென்றபோது வீட்டில் அவரது மாமனார் ராஜேந்திரன் என்பவர் மட்டும் இருந்துள்ளார்.
வீட்டில் சோதனை செய்தபோது 150 கிலோவிற்கும் மேல் தடைசெய்யப்பட்ட புகையிலை கூலிப் இருந்ததை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.அதனைத்தொடர்ந்து ராஜேந்திரன் ஓடைப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வாகனத்தை ஓட்டிவந்த குமணான்டித் தேவர் தெருவைச் சேர்ந்த அஜித்குமார் 28 மற்றும் தாத்தப்பன் குளத்தைச் சேர்ந்த கன்னிகா 42 என்பவர் கைது செய்யப்பட்டார். கார்த்திக் என்பவர் தலைமறைவு ஓடைப்பட்டி காவல் ஆய்வாளர் சிலைமணி தலைமையிலான காவல்துறையினர் கார்த்திக் தேடி வருகின்றனர்.