உத்தமபாளையம் வருவாய்த்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி ........

உத்தமபாளையம் வருவாய்த்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி ........
ஜன-25
ஆவணம்:1
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா



ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் இன்று (25/01/2023)  தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா  கல்லூரி நாட்டு நலப்பணி திட்டமும் உத்தமபாளையம் வருவாய் துறையும் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.இப்பேரணியை கல்லூரியின் முதல்வர் H.முகம்மது மீரான்,இரா.பால்பாண்டி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் திரு க.சந்திரசேகரன் வருவாய் வட்டாட்சியர் இணைந்து துவக்கி வைத்தனர்.பேரணி துவங்கும் முன்பாக மாணவர் கள் மற்றும் பேராசிரியர்கள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.இப்பேரணி கல்லூரியில் ஆரம்பித்து பழைய வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.இப்பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பேராசிரியர்கள் முகமது பஷீர் , பிலால், சீத்தாராமன்,  ,அனிதா,ரஷிதா பானு, சாஷிதா பர்வீன் ஆகியோர் இணைந்து செயலாற்றினர்.
Previous Post Next Post