2023-ஆம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவித்த ஐநா சபை மன்னார்குடியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து சிறுதாணிய நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
சிறுதானியங்கள் குறித்து கடந்த பல ஆண்டுகளாகவே இயற்கை விவசாயிகள், சூழல் ஆர்வலர்கள் என்று உலக அளவில் பேசிவருகின்றனர். இதையடுத்து, உலக அளவில் சிறுதானியத்துக்கான மரியாதை கூடிவருகிறது. இதைடுத்து ஐ.நா சபை 2023 ஆம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்து சிறப்பு செய்திருக்கிறது. அதனை போற்றும் வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தூய வளனார் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகள் நவதானிய பொங்கல் விழா வைத்து உழவின் சிறப்பு குறித்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மன்னார்குடி போலீஸ் டிஎஸ்பி அஸ்வத் ஆண்டோ சிறு தானிய முன்னெடுப்பாளர்களுக்கு விருது வழங்கினார். பள்ளி மாணவிகள் சிறுதானிய பொங்கல் வைத்து கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்கள் இயற்கையான நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் சிறுதாணியங்களான மாப்பிள்ளை சம்பா , கம்பு , கேழ்வரகு , குதிரைவாலி , மூங்கில் அரிசி , கருப்பு கவுனி உள்ளிட்ட ஏராளமான சிறுதாணிய உணவுகளை உண்பதானால் ஏற்படும் நன்மைகளை விளக்கி கூறுனார்கள் .