ஜன- 15
ஆவணம்:2
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா
9655331932
முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக கேரள அரசால் புதிய அணை கட்ட முடியாது. பென்னி குயிக்-ன் 182வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் ஓ.பி.எஸ் பேட்டி.
முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்-ன் 182வது பிறந்த நாளை முன்னிட்டு
தேனி மாவட்டம் லோயர் கேம்ப்-ல் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், கர்னல் ஜான் பென்னிகுயிக்-ன் தியாகத்தை நினைவு கூறும் விதமாக அவருக்கு லோயர் கேம்ப்-ல் மணிமண்டபம் அமைத்தது, தேனியில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்கு அவரது பெயரை சூட்டியது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான். மேலும் 5மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதல் கட்டமாக 142அடியாக உயர்த்தவும், பேபி அணையை பலப்படுத்திய பின் 152அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் பெற்றுத் தந்ததும் ஜெயலலிதா தான். ஆனால் தீர்ப்பிற்கு பின் பேபி அணையை பலப்படுத்த விடாமல் கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. தற்போதுள்ள திமுக அரசு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152அடியாக உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பொதுவாக இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, ஒரு நதி மேலிருந்து கீழாக செல்கின்ற போது பாசனப்பகுதியாக இருக்கின்ற மாநிலத்தின் இசைவு பெற்றுத்தான் மேல் பகுதியில் இருப்பவர்கள் அணையை கட்ட வேண்டும்.
அந்த அடிப்படையில் தமிழக அரசின் இசைவு பெறாமல் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக மேல் புறத்தில் கேரள அரசால் புதிய அணை கட்ட முடியாது. அதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை.
தமிழக அரசின் அனுமதி இல்லாமல் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக கேரள அரசால் புதிய அணை கட்டமுடியாது எனத் தெரிவித்தார்.
இவ்வாறு ஓ பன்னீர்செல்வம் லோயர்கேம்ப்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.