ஆந்திராவிலிருந்து கேராளாவிற்கு தேனி மாவட்டம் வழியாக ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள 1200 கிலோ கஞ்சா கடத்தல் மற்றும் வாகனம் பறிமுதல் மூவர் கைது.!!
ஜன-17
ஆவணம்; 1
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா
9655331932
ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு தேனி மாவட்டம் வழியாக கடத்தி வரப்பட்ட 1200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு லாரியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக தென் மண்டல ஐஜி அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
இதையடுத்து
தேனி -மதுரை மாவட்டங்களின் எல்லைப்பகுதி காவல்துறை சோதனை சாவடியில் தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்கின் தனிப்பிரிவு போலீசார் உடனடியாக விரைந்து வந்து வாகனங்களை தீவிர சோதனையிட்டு அனுப்பி வைத்தனர் .
அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் மிகவேகமாக வந்த லாரியை மடக்கிப் பிடித்த போலீசார் சோதனை செய்ததில் உணவு பொருட்களுக்கு இடையே கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு கடத்திச்செல்வது தெரியவந்தது.
இதையடுத்து லாரியில் வந்த ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த அபுபக்கர் சித்திக் , இளவனூர் அருகே உள்ள சிலுப்பியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி ஆகிய மூன்று பேர்களையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் கடத்தி வரப்பட்ட சுமார் ஆறு கோடி மதிப்புள்ள 1,200 கிலோ கஞ்சாவையும்
கடத்தி வந்த மூன்று பேரையும் தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.