காரிமங்கலம் அருகே கால்நடை பராமரிப்பு துறை விழிப்புணர்வு சிறப்பு முகாம்
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் பைசுஹள்ளி பஞ்சாயத்து முருகன்கொட்டாய் கிராமத்தில் கால்நடை பராமரிப்புதுறையின் மூலம் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இம்முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல்,செயற்கை முறை கருவூட்டல் செய்தல்,குடற்புளுநீக்கம் செய்தல்,சினை பரிசோதனை செய்தல்,தாதுஉப்புக்கலவை வழங்குதல், தடுப்பூசி போடுதல், தீவனபயிர் சாகுபடி விளக்கம்,கன்று வளர்ப்புமுறைகள்,மழைகால நோய்த்தடுப்பு முறைகள் மற்றும் கால்நடை காப்பீட்டு திட்டம் பற்றி பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் 575 பசுக்கள்,12 எருமைகள்,321 செம்மறி ஆடுகள்,200 வெள்ளாடுகள்,304 கோழிகள் மற்றும் 39 மற்ற விலங்குகள் என மொத்தம் 1451 கால்நடைகள் பயன் பெற்றது.மேலும் இம்முகாமில் சிறந்த கன்று வளர்போருக்கும்,சிறந்த முறையில் கறவைப்பசு வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இம்முகாமில் தருமபுரி மாவட்ட மண்டல இணை இயக்குனர் சுவாமிநாதன்,தருமபுரி கோட்ட உதவி இயக்குனர் மணிமாறன், நோய் புலனாய்வு உதவி இயக்குனர் சண்முகசுந்தரம், பைசுஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன்,ஒன்றிய கவுன்சிலர் சந்திரா மாதையன்,ஊராட்சி மன்ற துணைத்தலைவர் விஜயா தங்கராஜ்,கால்நடை உதவி மருத்துவர்கள் கௌதமன்,மோகனசுந்தரி,சார்லஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இம்முகாமை சிறப்பித்தனர்.