தேனி அரண்மணைபுதுரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலுக்கு சாதி பெயரை பயன்படுத்துவதில் ஒரு தரபினர் எதிர்ப்பு வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை

தேனி அரண்மணைபுதுரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலுக்கு சாதி பெயரை பயன்படுத்துவதில் ஒரு தரபினர் எதிர்ப்பு   வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை 
****************************************
தேனி. நவம்பர் 13. தேனி அரண்மணைபுதுர் கிராமத்தில் சக்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது 

 இக் கோவிளுக்கு குடமுழக்கு விழா ஏற்பாடு செய்த நிலையில் இரு தரபினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சக்தி விநாயகர் கோவிலில் சாதி சமுதாய பெயர்கள் பயன்படுத்திட கூடாது என்றும் சமுதாய பிரச்சினைகளை தூண்டுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் படி ஒரு பிரிவினர் இது சம்பந்தமாக புகார் அளிக்கப்பட்டு விசாரணையில் காவல் ஆய்வாளர்   ஒரு தலைபட்சமாக விசாரணை செய்யப்பட்டதாக கூறி கருத்து வேறுபாடு ஏற்பட்டு தேனி ஆட்சித்தலைவர்,காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய் துறையினருக்கு  வழக்கறிஞர் ஆறுமுகம் தலைமையில் புகார் அளிக்கபட்டு பிரச்சினைகள் எழாமல் பொதுவாக விழா நடத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியத்தை ஒரு பிரிவினர் ஏற்று கொள்ளாமல் சாதி, சமுதாய பெயர்களை பயன் படுத்தி வருவதால் இரு பிரிவினற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்துகொடுவிலார் பட்டி கிராம நிர்வாக அலுவலர் மது கண்ணன் தலைமையில் இரு பிரிவினருக்கு இடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
Previous Post Next Post