தேனி மாவட்டம் பெரியகுளத்தில் SDPIகட்சி சார்பில் மாநில சுயாட்சி மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
இந்த பொதுக்கூட்டத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த நளினி உட்பட சிறையில் இருந்த ஏழு நபர்களுக்கும் தமிழ்நாடு அரசு சிறப்பு தீர்மானத்தை கொண்டுவந்து ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு பல மாதங்கள் ஆகியும் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காததை அறிந்து உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து இருப்பது வரவேற்கத்தக்க செயலாகும்
அதேபோல் பல ஆண்டுகளாக தண்டனை பெற்று சிறைவாசிகளாக இருக்கும் இஸ்லாமியர்களையும் விடுதலைசெய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார் அதேபோல் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட கைதிகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை பெற்று இருந்தவர்களை விடுதலை செய்வதற்கு தீர்மானம் கொண்டுவந்த தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார் மேலும் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியும் அந்த தீர்மானத்தை கிடப்பில் போட்டஆளுஞர் ரவி அவர்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டுமென பேசினார்