இன்று 17.11.2022, வியாழக்கிழமை சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம்,சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம்,சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமூக மருத்துவத் துறை இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம், கவரப்பட்டு கிராமத்தை அடுத்த மேலத் திருக்கழிப்பாலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற கட்டட வளாகத்தில் நடைபெற்றது.

இன்று 17.11.2022, வியாழக்கிழமை 
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம்,
சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம்,
சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம், 
மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமூக மருத்துவத் துறை இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம், கவரப்பட்டு கிராமத்தை அடுத்த  மேலத் திருக்கழிப்பாலை ஊராட்சியில்  ஊராட்சி மன்ற  கட்டட வளாகத்தில்  நடைபெற்றது.
 இந்த முகாமின் துவக்க விழாவில்
சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க செயலாளர் முனைவர் எச்.மணிகண்டன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
துணை ஆளுநர்கள் எம்.தீபக்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். முனைவர் பி.முகமது யாசின் அவர்களும் மேலத் திருக்கழிப்பாலை ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. துர்கா திருமூர்த்தி,
திரு.திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடலூர் அரசு மருத்துவமனை சமூக மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர் தேவி அவர்கள் தலைமையில் மருத்துவ குழுவினர் மருத்துவர்கள் எம்.ஷிவானி,
கே.ஷியாம பிரியா, மற்றும் மருத்துவ செவிலியர் எம்.ரேவதி மார்கரெட், மருந்தாளுநர் கே.பாரி ஆகியோர் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர்.

இந்த முகாமில் 150 கிராமப் பயனாளிகள் சிகிச்சை பெற்றனர்.
முகாமில் பயனாளிகளுக்கு இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு மற்றும் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்டறிந்து மருந்து மாத்திரைகள் பரிந்துரைத்தனர்.
அனைவருக்கும் சளி இருமல் காய்ச்சல் மருந்துகளும் வழங்கப்பட்டன.

முகாமில்
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த ரொட்டேரியன்கள்
எஸ்.சிவசங்கரன்,
கே.இந்தர் ஜெயின்,
ஜி.சினுவாசன்,
ஆர்.அருள்,
ஆர்.கரிகால்வலவன்,
பி.பண்ணாலால்ஜெயின், 
எம்.மனீஷ் செல்லான் ஆகியோரும்,
சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்க செயலாளர் முனைவர் கே.. சின்னையன், பொருளாளர் எல். சி. ஆர். கே.நடராஜன் 
ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முகாம் ஏற்பாடுகளை
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் திரு.ராஜசேகரன், சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரிசங்கத் தலைவர் முனைவர் ஜி.ராஜராஜன், சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் முனைவர் எஸ்.பிரகதீஸ்வரன் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில்,   சிதம்பரம் மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளையோடு இணைந்து முகாமிற்கான மருந்துகள் மற்றும் உபகரணங்களை ஏற்பாடு செய்திருந்தனர்.

முகாமில் 
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம்,
சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம்,
சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை ஆகிய இயக்கங்களின் பொறுப்பாளர்கள் , உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சியில் தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டன. 

முகாமின் இறுதியில் சென்ட்ரல் ரோட்டரி சங்கப் பொருளாளர் என்.கேசவன்  நன்றி கூறினார்.
Previous Post Next Post