தேனி, இன்று (9.11.2022) இரவு சுமார் 7:30 மணி அளவில் பங்களா மேடு அருகில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவன் விக்னேஷ்வரன் ( குன்னூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவன்) சிகை (முடி) திருத்தம் செய்வதற்காக விடுதியை விட்டு வெளியே சென்று திரும்பும் வழியில் சாலையில் பாம்பு கடித்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இச்செய்தியை அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.வீ.முரளீதரன்,இ.ஆ.ப., அவர்கள் உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரடியாக சென்று மருத்துவர்களை அணுகி மாணவனுக்கு உயர் சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தினார்கள். மாணவன் இயல்பு நிலைக்கு திரும்பிய உடன் மாணவனை சந்தித்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவனுக்கு ஆறுதல் சொல்லி, முழு உடல் தகுதி பெற்ற பின்பு விடுதிக்கு செல்லலாம் எனவும் தேவையான எந்த உதவியும் அரசு செய்து தர தயாராக இருப்பதாக கூறி ஆறுதல் வழங்கினார். தற்பொழுது மாணவர் நல்ல உடல் தகுதியுடன் உள்ளார்.என தேனி செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் தெரிவித்தனர்