ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சீரமைத்து தர வேண்டும்

என் பெயர் கே கபில்தேவ் புஞ்சைபுளியம்பட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக உள்ளேன் கே வி கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவன் என்ற முறையிலும் சமூக ஆர்வலர் என்ற முறையிலும் இப்பள்ளியில் சுமார் 50 ஆண்டுகளாக மேல்நிலையில் வணிக கணித பாடப்பிரிவு செயல் பட்டு வந்தது பாடப்பிரிவு பின்னாளில் புள்ளியியல் பாடப்பிரிவாக செயல்பட்டு வந்தது இப்பாடப் பிரிவினால் பிகாம் வணிகவியல் சார்ந்த படிப்பிற்கு பாடப்பிரிவு மிகவும் பயனுள்ள வகையிலும் புள்ளியில் சார்ந்த படிப்புக்கு மிகவும் பயனுள்ள வகையிலும் இருந்தது அப்படிப்பட்ட பாடப்பிரிவினை ஆசிரியர் பற்றாக்குறை காரணம் காட்டி தலைமையாசிரியரும் பெற்றோர் ஆசிரியர் கழகம் திரு கணேசன் மூர்த்தி அவர்களும் பாடப்பிரிவை நீக்கி உள்ளனர் ஒரு பாட பிரிவை நீக்கும் பொழுது பெற்றோர்களிடமும் மாணவரிடமும் கல்வியாளர்களிடமும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும் ஆனால் அவைகள் ஏதும் நடத்தாமல் தலைமையாசிரியர் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கையும் ஆசிரியர் பற்றாக்குறையின் காரணம் காட்டி நீக்கி உள்ளார் கணக்குப்பதிவியல் வணிகவியல் பாடத்திற்கு இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர் அத்துடன் மட்டுமில்லாமல் பொருளில் ஆசிரியரும் உள்ளார் பட்டதாரி ஆசிரியர்களின் உபரியா ஆசிரியர்கள் உள்ளனர் அப்படி இருக்க ஏன் தலைமை ஆசிரியர் புள்ளியியல் பாடப்பிரிவை நீக்க வேண்டும் அருகாமையில் உள்ள மகளிர் மேல்நிலைப்பிலும் சத்தியமங்கலத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளிலும் இப்பாடப்பிரிவு இயங்கி வருகிறது அப்படி இருக்க இப்பாடப் பிரிவை தலைமை ஆசிரியர் நீக்கியது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் உள்ளது எனவே ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அவர்கள்  வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு நலன் தரக்கூடிய புள்ளியல் பாடப்பிரிவை பள்ளியில் மீண்டும் மாணவர் சேர்க்கை நடைபெற தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்துமாறு பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் சார்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக கோரிக்கையாக கேட்டுக்கொள்கிறேன்.
Previous Post Next Post