என் பெயர் சி தங்கமணி நான் மெட்டீரியல் கன்சல்டிங் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறேன் கே வி கே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் மற்றும் நன்கொடையாளர் என்ற முறையில் பாரதிய ஜனதா கட்சியில் நகர தலைவர் என்று முறையிலும் நான் இப்பள்ளிக்காக கட்சி சார்பற்ற அனைவருடனும் இணங்கி சேவையை செய்து வருகிறோம் அப்படி இருக்க இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒரு சார்பாக அதாவது பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜினாமா செய்ததை எடுத்து எங்களைப் போன்று இப்பள்ளிக்கு சேவை செய்து வரும் நன்கொடையாளர்களையும் மற்றும் பெற்றோர்களையும் எந்த விதமான கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல் தன்னிச்சையாக தலைமையாசிரியரும் மற்றும் முன்னாள் மாணவர் அமைப்பு திரு கணேசன் மூர்த்தி என்பவரை பெற்றோர் ஆசிரியர் தலைவராக நியமனம் செய்துள்ளனர் ஆனால் இது தமிழக அரசின் சட்ட விதிகள் முரணானது என்பதை தலைமையாசிரியர் உணராமல் தாங்கள் கொடுத்த கோரிக்கை கடிதத்தின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டு இருப்பது கணேசமூர்த்தியுடன் தலைமை ஆசிரியர் உடந்தையாக செயல்படுகிறாரோ என்ற அச்சமும் மற்றும் பள்ளிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக பள்ளியில் படிக்கும் மாணவனின் பெற்றோர் தான் இருக்க வேண்டும் என்பது சட்ட விதிகள் உள்ளது கணேசமூர்த்தி அவர்கள் எப்படி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட முடியும் இது சட்ட விதிகளுக்கு முரணானது அல்லவா இது குறித்து தலைமை ஆசிரியரிடம் பலமுறை தெரிவித்தும் தலைமை ஆசிரியர் அதிகாரியிடம் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி காலம் தாழ்த்தி கொண்டுள்ளார் எனவே பள்ளியின் நலமும் மாணவர்களுடைய நலம் சார்பாகவும் ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சீரமைத்து தர வேண்டும் அனைவருக்கும் சம உரிமை உண்டு இது அரசு பள்ளி என்பதை உணர்ந்து அரசு அதிகாரிகளும் தலைமை ஆசிரியரும் செயல்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கையாக வலியுறுத்திக் கூறுகிறேன்.
ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சீரமைத்து தர வேண்டும்
தமிழர் களம் மாத இதழ்
0