மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியில், இரண்டு சக்கரம் பழுது நீக்கம் செய்யும் பிரபு என்பவரின் கடையில் பொருத்துக்கரை, பீட்டர் மற்றும் சுரேஷ் ஆகியோர் பேசிக்கொண்டு வந்துள்ளனர். அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத நான்கு நபர்கள் அங்கும், இங்கும் வித்தியாசமான முறையில் சுற்றி, சுற்றி வந்துள்ளனர். இதனை அறிந்த பொருத்தக்கரை, பீட்டர், மற்றும் சுரேஷ் அவர்களுக்குள் பார்த்துக்கொண்டு இவர்கள் யார் என்று பேசி வந்துள்ளனர். அருகில் இருந்த நான்கு மர்ம நபர்கள் யார் நீ ? எங்களை பார்த்து பேசிக்கொண்டே இருக்கீங்க என்று ஆபாசமாக திட்டி ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டார்.
இதனைக் கேட்க வந்த பீட்டர் என்பவரை இரண்டாவதாக வந்த மர்ம நபர் பீட்டரை ஆவேசமாக திட்டி, இரண்டு சக்கர வாகனத்தில் வைத்திருந்த நீளமான கத்தியால் பீட்டரினை தாக்க முயன்ற போது, வயிற்றில் சிறு கீரல் ஏற்பட்டு தப்பித்துச் சென்றார். மேலும் பொருத்தக்கரை என்பவரை மற்றொரு பெயர் தெரியாத மர்ம நபர் இரண்டு சக்கர வாகனத்தில் வைத்திருந்த நீளமான கத்தியை எடுத்து எங்களவே கேள்வி கேட்குறீங்களாடா என்று தலையில் ஓங்கி வெட்டி விட்டு இரண்டு சக்கர வாகனத்தில் தப்பித்து சென்றனர். இதில் நான்கு மர்ம நபர்களை பின் தொடர்ந்து சென்ற போது, இரண்டு சக்கர வாகனத்தில் நம்பர் பிளேட் எண்கள் எதுவும் இல்லாமல் இருந்ததை அறிந்து அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதில் ஒருவர் செல்போன் மட்டும் கீழே தவறி விழுந்துவிட்டது. இதனை சுதாரித்து கொண்ட சுரேஷ் என்பவர் செல்போனை கையில் எடுத்துக் கொண்டு அப்பன் திருப்பதி காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். மேலும், காயம் அடைந்த பொருத்தக்கரை என்பவரை ஒத்தக்கடை அரசு மருத்துவமனையில் அவசர முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கொலை வெறித்தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்களை காவல்துறையினர் வெகுவிரைவில் கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி சமூக ஆர்வலர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.