திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் இன்று மாவட்ட வருவாய் ஆய்வாளர் சிதம்பரம் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார் .
அப்பொழுது தமிழக அரசால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் காலை உணவு திட்டம் எவ்வாறு வழங்கப்பட்டு வருகிறது எனவும்.
மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு திட்டங்கள் தரமுள்ளதாக வழங்கப்பட்டு வருகிறதா மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உணவு வழங்கப்பட்டு தரமானதாக வழங்கப்பட்டு வருகிறதா எனவும் மாவட்ட வருவாய் அலுவலக ஆய்வாளர் சிதம்பரம் அவர்கள் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார் .
மாணவர்களின் வருகை பதிவேடு காப்பாளர்களின் வருகை பதிவேடு பணியாளர்களின் வருகை பதிவேடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது இந்நிகழ்வில் வட்டாட்சியர் மலர்கொடி மற்றும் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்கள் விடுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.