மதுரை திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் வட்டாட்சியர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.

மதுரை திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் வட்டாட்சியர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.

 இக்கூட்டத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் லட்சுமணன் கூறியதாவது: மதுரை மாநகராட்சி தனக்கன்குளம் ஊராட்சிக்கு இடைப்பட்ட பகுதியான குறிஞ்சி நகர் பகுதியில், எல்லைப் பிரச்சினை காரணமாக சாலை போடப்படாமல் உள்ளது. மாநகராட்சி எல்லைக்கு உள்பட நகர் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு உழவர் அட்டை வழங்கப்படவில்லை அதை விரைவில் வழங்க வேண்டும் என்றும், தென்கால் கண்மாய் பகுதியில் படகு சவாரி விட்டு சுற்றுலா நகரமாக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

 தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொதுச் செயலர் மகாமுனி கூறியதாவது: நிலையூர் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தென்கால் கண்மாய் வரை போக்குவரத்துக்காக அகலப்படுத்தப்பட்டது ஆனால் சிலர் அதனை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அவற்றை அகற்ற வேண்டும் என்றும், திருப்பரங்குன்றம் செட்டிகுளத்தில் கழிவு நீர் தேங்குவதால் அப்பகுதியில் துர்நாற்றமும், தொற்றுநோய் பரவும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

கூட்டுறவு வங்கிகளில் சல்பேட், கலப்புப உரங்கள் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக திருப்பரங்குன்றம் பகுதி விவசாயிகள், ஏ.ஐ.கே.எஸ் மகாமுனி மற்றும் சி.பி.ஐ மாவட்ட குழு உறுப்பினர் ஜெகநேசன் ஆகியோர் இதில் கலந்து கொண்டு புகார் தெரிவித்தனர்.

செய்தியாளர் பாண்டியன்
மதுரை
Previous Post Next Post