தாமரைக்குளம் பேரூராட்சி மாதாந்திர கூட்டம்
தேனி, அக்.21-
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி அமைந்துள்ளது. இதில் மொத்தம் 15 வார்டுகள் கொண்டதாகும். பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர கூட்டம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது . இதில் கூட்டத்தில் தீர்மானங்களை பேரூராட்சி செயல் அலுவலர் ஆளவந்தான் வாசித்தார். மேலும் இக்கூட்டத்தில்துணைத் தலைவர் மலர்கொடி சேதுராமன் பணி நியமன குழு தலைவர் பாலாமணி பழனி முருகன், பேரூராட்சி உறுப்பினர்கள் வசந்தா, கோமதி, முருகன், பாண்டி, மைதிலி, சாந்தி, ராஜேந்திரன் , ஜாகிர் உசேன், கவிதா, தேவகி, முத்துலட்சுமி, முனியம்மாள் மற்றும் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குறைகள் மற்றும் தேவைகளை அந்தந்த பகுதிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி அவற்றை நிறைவேற்றித் தருமாறு இக்கூட்டத்தில் கேட்டுக் கொண்டனர். மேலும், இக்கூட்டத்தில் 22 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.