மதுரை கள்ளிக்குடி
மருதுபாண்டியர் திருவுருவ சிலைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் மரியாதை
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த மருது சகோதரர்களின் 221-வது நினைவு தினமான அக்டோபர் 24-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அக்டோபர் 27-ந் தேதி (இன்று) கள்ளிக்குடியில் உள்ள மருது சகோதரர்கள் திருவுருவ சிலைக்கு பொதுமக்களால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதில் மதுரை ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட குழு உறுப்பினர் தனுஷ்கோடி தலைமையில், மருது சகோதரர்கள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. சிபிஐ மாவட்ட குழு அம்சவள்ளி, ஏஐடியுசி செயலாளர் மாரியப்பன், ஏஐடியுசி பொருளாளர் இருளப்பன், குராயூர் தலைவர் மருது, சிபிஐ கொக்குலம் உறுப்பினர் வேலு, குராயூர் மூத்த தோழர் மருதப்பன், மாயகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டு மருது சகோதரர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.