காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய கொடிக்கம்பம் நடும் விழா நடைபெற்றது

காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய கொடிக்கம்பம் நடும் விழா நடைபெற்றது


காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுவீரப்பட்டு மற்றும் எட்டியாபுரம் பகுதிகளில் குன்றத்தூர் ஒன்றிய தலைவர் ஜீவா செந்தில்குமார் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய கொடிக்கம்பங்கள் நடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே எஸ் பாபு கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் இணைந்து கொடிக்கம்பத்தில் கொடியேற்றி வைத்தார். அதற்கு முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த மாவட்ட தலைவருக்கு அனைத்து பகுதிகளிலும் உற்சாக வருவதற்கு அளிக்கப்பட்டது. மேலும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களுடைய அன்பினை பகிர்ந்து கொண்டனர். இதில் மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Previous Post Next Post