15 ஆண்டுகளுக்கு மேலாக பணிஉயர்வு, சம்பள உயர்வு கோரி வரும் ஊர்புற நூலகர்கள்..தேனி, அக்-16,

15 ஆண்டுகளுக்கு மேலாக பணிஉயர்வு, சம்பள உயர்வு கோரி வரும் ஊர்புற நூலகர்கள்..
தேனி, அக்-16,
பொது நூலகத்
துறையில் பணி
புரியும் 1500 ஊர்ப்புற நூலகர்கள்,
 15 ஆண்டுகளுக்கு மேலாக ஊதிய உயர்வு இல்லாமல் சிறப்பு காலமுறை ஊதியத்தில்பணி
புரிந்து வருகிறார்கள் எனவே இவர்களுக்கு மூன்றாம் நிலை நூலகர் பதவி உயர்வு வழங்க வேண்டும் எனவும் பல வருடங்களாக தரம் உயர்த்தப்படாமல் இருக்கும் ஊர்ப்புற நூலகங்களை தரம் உயர்த்தியும், காலியாக உள்ள 500 க்கும் மேற்பட்ட 3ம் நிலை நூலகர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் எனவும், 
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின்
தேர்தல் வாக்குறுதி 178 ன்படி  ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும என்பன போன்ற கோரிக்கையை அனைத்து ஊர்ப்புற நூலகர் சார்பாக தமிழ்நாடு அரசுபொது நூலகத்துறை பணியாளர் கழகம் தேனி மாவட்டம் (C & D) சார்பாக கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post