கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தமிழ்நாடு AITUC கட்டடத் தொழிலாளர் சங்கம் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் 14.10.2022 அன்று மிளகு பாறையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தோழர் MR முருகன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தை மாநில துணைத்தலைவர் தோழர் க சுரேஷ் MC அவர்களும் மாவட்ட செயலாளர்  தோழர் C செல்வகுமார் அவர்களும் வழி நடத்தினார்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட துணை தலைவர்கள் தோழர் S முத்தழகு P துரைராஜ் S முத்துலெட்சுமி KS இருதயசாமி மாவட்ட துணைச் செயலாளர்கள் தோழர் P வீராசாமி M மருதாம்பாள்B பாலசுப்ரமணியம் M சுமதி மற்றும் D நிர்மலா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள் கூட்டத்தில் நவம்பர் 13ல் திருச்சியில் நடைபெறும் AITUC மாவட்ட மாநாடு பிரதிநிதி 21 தோழர்களை ஏக மனதுடன் தேர்வு செய்யப்பட்டன* 

*நவம்பர் 16.17ல் ராணிப்பேட்டையில் நடக்கும் கட்டட சங்க மாநில மாநாட்டிற்கு 12 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டன கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது*

*தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் 5 ஆயிரம் தீபாவளி போனஸ் வழங்க உடனே தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்* 

*கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சியிலும் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துரை ஆகிய சுங்கச்சாவடியில் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை உடனே அவர்கள் செய்த பணியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தொடர்ந்து கட்டட சங்கம் ஆதரவு அளிப்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் தோழியர் M மருதம்பாள் நன்றி கூறினார் நன்றி*
Previous Post Next Post