அதிமுகவினர் கைவிட்டனர் வேதனையில் ஊராட்சி மன்ற தலைவர்
ஊராட்சி மன்ற தலைவர் சாமா சேட்டு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் சாத்தூர் ஊராட்சியை சேர்ந்தவர்ர் சாமா.சேட்டு இவர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார் அதே பகுதியில் அதிமுக கிளைச் செயலாளராகவும், அம்மா பேரவை ஆற்காடு மேற்கு ஒன்றிய துணைச் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார் இந்தநிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் சாத்தூர் ஊராட்சி பட்டியலினத்தவர் மட்டும் போட்டியிடும் ஊராட்சியாக அரசு அறிவிக்கதால், சேட்டு அதிமுக சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்,
சமூக ஆர்வலர் டி .ரவி
தற்போது இவர் தலைவராக பதவி வகித்து வருகிறார் தலைவர் சேட்டு நேற்றைய முன்தினம் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் அவர் பேசியதாவது நான் சாத்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்று 11 மாதங்கள் முடிவடைந்த நிலையில் இதுவரை மக்கள் பணி செய்ய முடியாமல் பல நிலைகளில் ஒடுக்கப்பட்டு வருகிறேன் என்றார்
ஒரு பக்கம் திமுக ஆற்காடு கீழக்கு ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன்
ஊராட்சிக்கு வரும் வேலைகளை செய்யவிடாமல், நூதன முறையில் ஒடுக்கி, பலநிலைகளில் தொல்லை கொடுத்து வருகிறார் துணைத் தலைவர் இளங்கோவனும் அவரது ஆதரவாளர்களும் சமூக அடிப்படையில் ஒன்று சேர்ந்து ஊராட்சி பணிகளில் ஒத்துழைப்பு தராமலும், செய்ய விடாமல் தடுத்து வருகிறார், ஊராட்சி செயலாளராக செயல்பட்டு வந்த கீழ்மின்னல் கிராமத்தைச் சேர்ந்த திருமால் என்பவர் ஊராட்சி பணிகளில் ஒத்துழைப்பு தராமல், நூதனமுறையில் ஒடுக்கி வந்தார், இடமாற்றம் செய்யப்பட்டார்
தற்போது ஊராட்சி செயலாளராக பணியாற்றி வரும் அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், மரியாதை இல்லாமல் பேசுகிறார், தலைவரின் கையெழுத்து இல்லாமல் வீடு ஒருவர் பெயரில் இருக்கும்போது, இவர் அதே வீட்டை வேறொருவர் பெயரில் வீட்டு வரி , குழாய் வரி ரசதி போட்டு தந்து பொதுமக்களை எனக்கு விரோதமாய் திருப்பி விடுகிறார் இது போன்று மக்கள் பணி செய்ய விடாமல் தடுத்து வரும் நபர்களை குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
இந்த அடக்குமுறைகளை எல்லாம் ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக கழக மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் அறிந்திருந்தும், என்னை கண்டுகொள்ளாமல் கைவிட்டனர் என்று வேதனையில் புலம்புகிறார் சாத்தூர் ஊராட்சி மன்ற தலித் தலைவர் சாமா. சேட்டு, இந்த சம்பவத்தைக் குறித்து சமூக ஆர்வலர்களும், இந்திய குடியரசு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினருமான டி.ரவி மற்றும் சில சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்த போது அதிமுக கடைமட்ட தொண்டர்களின் இயக்கம் என்றும்,நாங்கள் உண்மை, தூய்மை, நேர்மையானவர்கள் என்றும், சாமானிய மக்களுக்கு எங்கெல்லாம் பிரச்சனை, அநீதி, அநியாயம், நடக்கிறதோ.. அங்கெல்லாம்.. தட்டிக் கேட்கிற ஒரே இயக்கம் அதிமுக என்றெல்லாம் பல்வேறு கருத்துக்களை வீரவசனம் பேசும் அதிமுக மாவட்டச் செயலாளர் சு.ரவி,ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தும், 11 மாதங்களாக பாதிக்கப்பட்டு வரும் அதிமுக தலைவர் சேட்டு வை இதுவரையில் கண்டுகொள்ளவே இல்லை
மேடைக்கு,மேடை கர்ஜிக்கும் முன்னாள் மாவட்டச் செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை போன்ற முன்னணி பொறுப்பாளர்கலெல்லாம் எங்கே? போனார்கள், சேட்டு அதிமுகவைச் சேர்ந்தவர் தானே? ஏன் அவருக்காக குரல் கொடுக்கவில்லை, கண்டனம் தெரிவிக்கவில்லை, துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசவில்லை தலித் தலைவர் என்பதால் அதிமுகவினர், புறக்கணித்து வருகிறீர்களா? மேடையில் மட்டும் பேசினால் போதுமா? உங்களுடைய கோபம், கர்ஜனை எல்லாம் எங்கே? போனது, மேடைக்கான நாடகமா ? இது நடிக்கிறீர்களா? இதுவே திமுகவைச் சேர்ந்த தலைவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் ஒட்டுமொத்த தொண்டனும் ஒன்றாக சேர்ந்து போராடி இருப்பார்கள் இது அதிமுகவில் கேள்விக்குறியாக இருப்பது ஏன் என்ற கேள்வியை முன் வைத்தனர்
இவர்களின் இந்த கேள்விக்கு? ராணிப்பேட்டை மாவட்ட அதிமுகவினர் செயல்பாடுகள் என்னவாயிருக்கும் அதிமுக தலைமை கழகம் இதனை கண்டு கொள்ளுமா? என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.