தமிழ்நாடு AITUC கட்டடத் தொழிலாளர் சங்கம் திருச்சி மாவட்ட 6வது மாநாடு பேரணி கொடியேற்று விழாவுடன் 25/9/2022 காலை 10.00 மணி அளவில் இனாம்குளத்தூர் ஒத்தக்கடையில் இருந்து தலைமை குழு தோழர்கள் P வீராசாமி M மருதம்பாள் KS சங்கரதாஸ் ஆகியோர் தலைமையில் மாநாட்டின் கொடியை மாவட்ட தலைவர் தோழர் க. சுரேஷ் எம் சி அவர்கள் ஏற்றி வைத்து உரையாற்றினார்
மாநாட்டின் பேரணியை மாவட்ட செயலாளர் தோழர் C செல்வகுமார் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து உரையாற்றினார் மாநாட்டில் மணிகண்டம் ஒன்றிய பொருளாளர் தோழர் S முத்தழகு வரவேற்புரை ஆற்றினார் அஞ்சலி தீர்மானத்தை தோழர் P துரைராஜ் முன்வைத்தார் மாநில செயலாளர் தோழர் R துரைசாமி அவர்கள் மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் மாநாட்டை வாழ்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் S சிவா அவர்களும் அரசு போக்குவரத்து கழக மாவட்ட செயலாளர் தோழர் M சுப்பிரமணி அவர்களும் CPI மணிகண்டம் ஒன்றிய பொருளாளர் தோழர் KN ஜெகநாதன் அவர்களும் பெண்கள் சங்க மாநில குழு உறுப்பினர் தோழியர் D நிர்மலா அவர்களும் மாநாட்டை வாழ்த்தி உரை நிகழ்த்தினார்கள் மாவட்ட செயலாளர் தோழர் C செல்வகுமார் அவர்கள் வேலை அறிக்கையை வைத்தார் அதன் மீது சிறப்பான விவாதம் நடைபெற்று மாவட்ட துணைச் செயலாளர் தோழர் P வீராசாமி வரவு செலவு கணக்கை முன்வைத்தார் இறுதியாக புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று அதில் கௌரவத் தலைவராக தோழர் க. சுரேஷ் எம் சி அவர்களும் தலைவராக தோழர் MR முருகன் அவர்களும் செயலாளராக தோழர் C செல்வகுமார் அவர்களும் பொருளாளராக தோழர் P பழனியப்பன் அவர்களும் துணைத் தலைவர்களாக தோழர் S முத்தழகு தோழியர் S முத்துலெச்சுமி தோழர் P பாலசுப்பிரமணி தோழர் P துரைராஜ் துணைச் செயலாளர்களாக தோழியர் M மருதம்பாள் தோழர் P வீராசாமி KS இருதயசாமி தோழியர் M சுமதி ஆகியோர்களை ஏக மனதுடன் மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு செய்து புதிய நிர்வாகிகளை வாழ்த்தி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் தோழர் M செல்வராஜ் அவர்கள் உரையாற்றினார் கூட்டம் முடிவில்*
*கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது*
*மணிகண்டம் ஒன்றியத்தில் 128 தொழிலாளர்களுக்கு இலவச இடமும் இலவச பட்டாவும் வழங்கி அதன் அனைத்து வேலைகளையும் முழுமையாக முடித்த அதிகாரிகளுக்கு நன்றி கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது*
*இன்னும் நிலுவையில் உள்ள 123 பயனாளிகளுக்கும் உடனே இலவச பட்டாவும் இலவச வீட்டு மனை வழங்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது*
*இனாம்குளத்தூர் ரயில்வே கேட்டிற்கு மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது*
*கட்டுமானப் தொழிலாளர்களுக்கு பெண்களுக்கு 50 வயதிலும் ஆண்களுக்கு 55 வயதிலும் மாதம் ரூபாய் 6000 ஆக ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது*
*கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட வழங்கும் ரூபாய் 4 லட்சத்தை உடனே வழங்கி 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது*
*கூட்டத்தில் திருச்சி மாநகர் பகுதி மணிகண்டம் ஒன்றிய பகுதி லால்குடி ஒன்றிய பகுதி மருங்காபுரி ஒன்றிய பகுதி வையம்பட்டி ஒன்றிய பகுதி மணப்பாறை ஒன்றிய பகுதியில் இருந்து அனைத்து பிரதி தோழர்களும் பங்கேற்று இறுதியாக இனாம் குளத்தூர் ஊராட்சி மன்ற 4வது வார்டு உறுப்பினர் தோழர் B கலைச்செல்வன் நன்றி கூறினார்*