தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வனவேங்கைகள் கட்சி சார்பாக சாலை மறியல் போராட்டம்
போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும்இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம்
தேனி செப்-22
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேனி மதுரை சாலையில் வனவேங்கை கட்சி சாரபாக நரிக்குறவர் என்னும் ஜாதிப் பெயரில் குறவர் சொல்லை நீக்கிடக்கோரியும் ,வட மாநிலத்தைச் சேர்ந்த மக்களால் வக்ரா போக்லி குருவிக்காரர் என உண்மையான ஜாதிப் பெயரைக் கொண்ட மக்களை குறவர் ஜாதி பெயரை இணைத்து பழங்குடியின பட்டியலில் நரிக்குறவர் என்று சேர்க்க மத்திய அமைச்சரவை அளித்த ஒப்புதலை திரும்ப பெற கோரியும்,நரிக்குறவர் நலவாரியம் என்னும் வாரிய பெயரில் குறவர் சொல்லை நீக்கிடக்கோரியும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்
அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேனி மதுரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இந்நிலையில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸ்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு மோதல் முற்றியதால் ஏடிஎஸ்பி விவேகானந்தர் தலைமையில் போராட்டக்காரர்களை கைது செய்து பாதுகாப்பு போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அப்புறப்படுத்தினர்
இதனால் தேனி மதுரை சாலையில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக பதற்றமான சூழல் நிலவியது