பெரியகுளத்தில் கீழே கிடந்த 10பவுன் தங்க சங்கிலியை காவல்துறையில் ஒப்படைத்த முதியவர்...
தேனி செப்-21
தேனி மாவட்டம் பெரியகுளம் சுப்பிரமணிய சாவடிதெருவை சேர்ந்த சப்பாணி பிள்ளை மகன் முத்துப்பாண்டி(வயது 54)இவர் வடகரைவரதப்பர் தெருவழியாக நடந்து செல்லும் போது கீழே கிடந்த பர்ஸை எடுத்து பார்த்துள்ளார் அதில் 10பவுன் மதிக்கத்தக்க தங்க நகை இருப்பதை கண்டார்.தங்க நகை உடன் பெரியகுளம் காவல் கண்காணிப்பாளர் கீதா மற்றும் காவல் ஆய்வாளர் மீனாட்சி ஆகியோரிடம் கீழே கண்டெடுத்த நகையை ஒப்படைத்துள்ளார். பெரியகுளம்காவல்
துறையினரின் தீவிர விசாரணையில் நகையை தவறவிட்டது பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியைச் சேர்ந்த சரவணன்மனைவி செல்வி என்பது விசாரணையில் தெரியவந்தது. பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் காவல் ஆய்வாளர் செல்வியிடம் நகையை ஒப்படைத்தனர்.கீழே கிடந்த பத்து பவுன் தங்க சங்கிலியை காவல் துறையில் ஒப்படைத்த முத்துப்பாண்டி, துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட நபரிடம் நகையை ஒப்படைத்த காவல் துணை கண்காணிப்பாளர் கீதா, ஆய்வாளர் மீனாட்சி ஆகியோர்களுக்கு நகையை பெற்று கொண்ட செல்வி மற்றும்பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.