இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எனப்படும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்-சேய் சிறப்பு 102 அவசர ஊர்தி சேவையினையும், உயிர் காக்கும் சிகிச்சை திறனறிவு பயிற்சி ஆய்வகம் ஒன்றினையும் கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் முன்னிலையில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர்கே பன்னீர் செல்வம் திறந்து வைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார்.

இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எனப்படும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்-சேய் சிறப்பு 102 அவசர ஊர்தி சேவையினையும், உயிர் காக்கும் சிகிச்சை திறனறிவு பயிற்சி ஆய்வகம் ஒன்றினையும் கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் முன்னிலையில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர்கே பன்னீர் செல்வம் திறந்து வைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார்.
பின்னர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது  :

” 102 அவசர உறுதி சேவை திட்டம் என்பது தமிழ்நாடு முதலமைச்சரின் முதன்மைத் திட்டமாகும். இதனால் பிரசவத்திற்கு பிந்தைய தாய் மற்றும் பிறந்த குழந்தையுடன் பாதுகாப்பாக வீடுகளுக்கு கொண்டு சேர்க்க102 அவசர ஊர்தி சேவை திட்டம்  உதவுகிறது. சிதம்பரம் பகுதியை சுற்றியுள்ள கிராமப்புற மக்களுக்கு இந்த சேவை வாகனம் பயனுள்ளதாக அமையும். மேலும், இக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயிர் காக்கும் சிகிச்சை திறனறிவு பயிற்சி ஆய்வகத்தின் மூலம் முதுநிலை பட்டதாரிகள்,பயிற்சி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் அவசர காலங்களில், அவசர ஊர்தி வருவதற்கு காத்திருக்கும் போது தக்க நேரத்தில் பல உயிர்களை காப்பாற்றுவதற்கு இந்த திறனறிவு ஆய்வகபயிற்சி வழங்கப்படுகிறது.பன்முக உயர்தர தீவிர சிகிச்சை பகுதியினை ஆய்வு செய்து, அரசு கல்லூரி மருத்துவமனையினை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி துவக்கி    வைக்கப்பட்டது. இதில் 20 மேம்பட்ட அவசர சிகிச்சை படுக்கைகள், மானிட்டர்கள், எக்கோ, எக்ஸ்ரே இயந்திரங்கள் , ஏபிஜி இயந்திரங்கள், பிலூரிபோன் மீட்டர்கள் உள்ளிட்ட உயர்தர சிகிச்சைக்கு தேவையான அனைத்து உபகரணங்கள் மற்றும் நோயாளிகளின் மத்திய கண்காணிப்பு அமைப்பு ஆகிய வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது,” 
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் இராம கதிரேசன்,  பதிவாளர்(பொ)
கே சீத்தாராமன், இணைஇயக்குநர் (நலப்பணிகள்) மருத்துவர் .இரமேஷ்பாபு, துணை இயக்குநர் (சுகாதாரம்) மருத்துவர் மீரா, 
மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தலைவர் மருத்துவர் சண்முகம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் லாவண்யாகுமாரி,  மருத்துவர்
அலுவலர் பாரி, கடலூர் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பாலமுருகன், துணைவேந்தரின் நேர்முகசெயலர் பாக்கியராஜ், அண்ணாமலை பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் இரத்தின சம்பத்,
அண்ணாமலைநகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி, சிதம்பரம் நகர்மன்ற துணை தலைவர் முத்து, திமுக முக்கிய நிர்வாகி ஜேம்ஸ்
விஜயராகவன், தொழிலதிபர் சண்முகம் மற்றும் செவிலியர்கள் அலுவலர்கள் பங்கேற்றனர்.
Previous Post Next Post