பெரியகுளத்தில் கந்துவட்டி கொடுமை ஒருவர் தற்கொலை
................................................................
தேனி மாவட்டம் பெரியகுளம்,
எ-புதுக்கோட்டை, ஆரோக்கியமாதா நகரைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் பரமசிவம் இவர்
தினக்கூலி வேலை செய்து வருகிறார் இவருக்கு வனராஜ், இளையராஜா என்ற இரண்டு மகன்களும்,
ராஜலட்சுமி என்ற மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன்
குடியிருந்து வருகிறார்கள். மூத்த மகன் வனராஜாவுக்கும் நிலக்கோட்டையை சேர்ந்த அமிர்தமணி
என்பவருக்கும் திருமணமாகி இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 8 வருடங்களுக்கு
முன்பு இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பிறகு வனராஜ் மறுமணம் புரியாமல் தனியாகவே
குடியிருந்து கொண்டு பூ மாலை கட்டும் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு எ. புதுக்கோட்டை ஆராக்கிய மாதா நாகரைச் சேர்ந்த முருகேசன் மகன் சரவணன் என்பவரிடம் வனராஜாவட்டிக்கு 30,000/- ரூபாய் கடன்
வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திரும்ப கொடுக்க முடியாத நிலையில் கடன் கொடுத்த சரவணன் வனராஜாவுக்குபோன் போட்டு பணத்தை கேட்டு மிரட்டி வந்துள்ளார் இந்நிலையில் 06.09.2022ம் தேதி
இரவு 07.00 மணியளவில் சரவணன் வீட்டின் முன்பு கூட்டமாக இருந்துள்ளதை பார்த்த பரமசிவமும் ராஜலட்சுமியும் அங்கு வனராஜை சரவணன் மற்றும் அவருடையஅப்பா முருகேசன் சரவணனின் மனைவி ஆகியோர்கள் வனராஜை தெருவில் இருந்து அவர்களது மாடி வீட்டிற்கு கழுத்தைப் பிடித்து இழுத்துச் சென்று மார்பிலும் உடல் முழுவதும் அடித்து கழுத்தை பிடித்து இழுத்து என் பணத்தை கொடுக்கவில்லை என்றால் வெட்டிக்கொலை செய்து விடுவேன் என்று அறிவாலை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.அதன் பின்பு இரவு சுமார் எட்டு மணி அளவில் வனராஜா திடீரென வாந்தி எடுத்துள்ளார்- இது சம்மந்தமாக வனராஜாவின் பெற்றோர் கேட்டபோது சரவணனும் அவர்களது குடும்பத்தினரும் அடித்ததில் அவமானம் தாங்க முடியாமல் விஷ மருந்தை வனராஜா குடித்து விட்டதாக கூறியுள்ளார்.உடனே அவருடையமகளும் மருமகனும் சேர்ந்து ஒரு போக்கு ஆட்டோவில் வனராஜாவை ஏற்றி பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்கள் அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் அங்கு சிகிச்சையில் இருந்த வனராஜ்
7-9 -2022ஆம் தேதி பகல் ஒரு மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் .
மகனின் இறப்பு குறித்து சட்டப்படி விசாரணை செய்து நடவடிக்க வலியுறுத்தி பெரியகுளம் காவல்நிலையத்தில் வனராஜாவின் தகப்பனார் பரமசிவம் புகார் மனு கொடுத்துள்ளார்.
புகார் மனுவை பெற்றுக் கொண்ட பெரியகுளம் காவல்துறையினர் குற்ற வழக்கு எண் 21/ 2002 பிரிவு174 ன் படி
சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணையை செய்து வருகின்றார்கள் இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களான சரவணன் அவரது மனைவி ஆகியோர்காவல்துறையின் விசாரணைக்கு பயந்து தனது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டார்கள் என்பது தற்போது தெரிய வருகிறது
இது சம்பந்தமாக விசாரணை செய்வதற்கு பெரியகுளம் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களை இன்றுவரை வலை வீசி தேடி வருகிறார்கள்
கந்துவட்டிக்காக கடன் வாங்கிய நபரை தற்கொலைக்கு தூண்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
மேலும் வட்டிக்கு பணம் கொடுத்த சரவணன் அந்த பகுதியில் இதுபோலவே பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து நெறுக்கடி கொடுத்துவருவதாக பரவலாக பேசி வருகின்றார்கள்- இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க கந்துவட்டி தடை சட்டத்தை பயன்படுத்தி காவல்துறை கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்