திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆத்தூர் @ செம்பட்டியில், 09-09-2022 இன்று, *வட்டார அளவிலான சுகாதார பேரவை கூட்டம்* நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு, ஆத்தூர் ஒன்றிய பெருந்தலைவர், தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்தீஸ்வரி,எம்.பி.பி.எஸ் அவர்கள் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) வட்டார வளர்ச்சி அலுவலர்( கி.வ) வட்டார கல்வி அலுவலர், மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், மற்றும் அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வட்டார அளவில், பொது மக்களின் நலன் சார்ந்த அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், பாதுகாப்பான குடிநீர் வழங்கல், தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள், பெண்கள் நலம் , மக்களை தேடி மருத்துவம் அளிப்பதற்கு முன்னுரிமை, தெருநாய்களை கடுப்படுத்துதல், 108 ஆம்புலன்ஸ் கூடுதலாகவும், நோய் காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துதல், மற்றும் பரிசோதனைகள் நடத்துதல் போன்ற தீர்மானங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது...