தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் பிரசித்தி பெற்ற-மலைமேல் உடனுறை கைலாசநாதர் திருக்கோவில் பௌர்ணமி (09.09.2022) நாளையொட்டிபக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான
ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இளைய, மகனும் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவருமான வி.ப. ஜெய பிரதீப் அவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்
.அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைஅன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார் பொருளாளர் விஜயராணி, சுந்தர்,பழனிச்சாமி அண்ணாதுரை, ஞானம், சரவணன்,முருகவேல் மற்றும் அதிமுக நிர்வாகிகள்,சதிஸ், உதயா ஆகியோர்கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.கோவிலுக்கு வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.