பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப் பள்ளியில் கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்த தின விழா சிறப்பாக நடைபெற்றது
இந்த விழாவில் பள்ளித் தாளாளர் எஸ். முத்துமாணிக்கம் தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி தலைமையாசிரியர் ஏ. எஸ் .பாலசுப்ரமணியன் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி காமராஜரை பற்றி சிறப்புரை ஆற்றினார். மாணவ மாணவிகளிடையே பேச்சுப்போட்டி .கவிதை போட்டி நடத்தி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது விழாவில் பள்ளி நிர்வாக குழு உறுப்பினரும் ஆசிரியருமான பி. தேவப்பிரியா பரிசு பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து கூறினார் விழாவின் முடிவில் பள்ளி ஆசிரியை தனலட்சுமி நன்றி கூறினார் ஆசிரியர் எஸ். தங்கப்பாண்டியன்ராஜா விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்