சிதம்பரம் காஸ்மோ பாலிட்டன் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சேவை பணியேற்பு விழா
சிதம்பரம் .ஜூலை.12-
பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்கத்தின் 2022 - 23 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் சேவை பணி ஏற்பு விழா சிதம்பரம் அண்ணாமலைநகர் பொன்மணி அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு சிதம்பரம் முன்னாள் காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். புதிய நிர்வாகிகளான தலைவராக M.பாண்டியன், செயலாளராக பொறியாளர் S. செந்தில்குமார், பொருளாளராக சிவ.சம்பத் ஆகியோர்களை முன்னாள் பன்னாட்டு இயக்குனர் சரவணன் கலந்து கொண்டு பதவி பிரமாணம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார். விருதை கொடைவள்ளலும், மாநாட்டு நடைமுறைகள் மாவட்ட தலைவருமான அகர்சந்த் சோரடியா கலந்துகொண்டு சேவை திட்டங்களை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் உறுப்பினர் சேர்க்கை மாவட்ட தலைவர் ராஜராஜன், கமல்குமார்போத்ரா, சமுத்திரராஜகுமார், டாக்டர்.திருமால், தீபக், கமல்கிஷோர்ஜெயின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயக்குநர் சுஜித் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஏழை எளிய 9 பயனாளிகளுக்கு தையல் இயந்திரமும், 5 ஏழை விவசாயிகளுக்கு விலையில்லா மருந்து தெளிப்பானும், பூலாமேடு,மெய்யாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு 2 பீரோக்களும், சென்றியோ குழும இயக்குனர் சுரேஷ் சார்பில் பெற்றோரை இழந்து வாடும் ஆதரவற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் லலித் மேத்தா, மணிகண்டன், ராதாகிருஷ்ணன், ரஞ்சித்குமார் உள்பட சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்