நாம் தமிழர் கட்சியினரின் கோரிக்கை
நடவடிக்கை எடுத்த ஈபி நிர்வாகம்
கும்மிடிபூண்டி பேரூராட்சிக்குட்பட்ட ரெட்ட மேடு சாலையில் குமிடிபூண்டி காவல் நிலையம் அருகே ஆறு மாதங்களுக்கு மேல் மின் கம்பம் உளுத்து எந்த நேரத்திலும் விழுந்து பேராபத்து ஏற்படும் வகையில் நின்றிருந்தது இந்த ஆபத்தான மின்கம்பத்தை மாற்றித் தந்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி வாழ் மக்கள் மின்னிணைப்பு ஊழியர்களிடம் பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல்
காலதாமதம் செய்து வந்துள்ளனர் தகவலறிந்த பெத்திகுப்பம் ஊராட்சி சாமி ரெட்டி கண்டிகை பகுதியில் வசித்து வரும் நாம் தமிழர் கட்சியின் கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளர்
த. கணேசு அப்பகுதியை சேர்ந்த கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக கும்மிடிப்பூண்டி மின் பகிர்மான மற்றும் பராமரிப்பு அலுவலகத்தில் கடந்த 2ஆம் தேதி அன்று கோரிக்கை மனு அளித்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது ரெட்டமேடு சாலை கும்மிடிப்பூண்டி காவல் நிலையம் அருகே உள்ள
மின்கம்பம் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது இதனால் அப்பகுதி வாழ் பொதுமக்கள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பம் அமைத்து தர வேண்டும்
என்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக கோரிக்கை மனுவினை உதவி பொறியாளர் ரவிச்சந்திரனிடம் வழங்கினர் உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் நாம் தமிழர் கட்சியினரின் கோரிக்கையை ஏற்று 11.7.2022அன்று பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தை அமைத்து நடவடிக்கை எடுத்தார் இதனால் அப்பகுதி வாழ் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்
அதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளர் த.கணேசு குறித்து சற்று அலசிய போது 15 வருடங்களுக்கு மேலாக சமூக ஆர்வலராக இருந்து பொது மக்களின் தேவைகளை அறிந்து பல நலத்திட்ட உதவிகள், சமூக சேவைகள் செய்து வருவது தெரியவந்தது அநீதி நிறைந்த உலகத்துல, நீதியும் நேர்மையுமான செயல்களை த.கணேசு போன்ற சமூக ஆர்வலர்கள் செய்து வருவதினால் தான் மக்களுக்கான நன்மைகள் சென்று சேருகிறது என்பது எத்தனை உண்மையானது தமிழர் களம் மாத இதழ் சமூக ஆர்வலர் த.கணேசு சமூகப்பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறது.