19 லட்சம் மதிப்பீட்டில் நீர்த்தேக்கத் தொட்டிநெமிலி ஒன்றிய குழு பெருந்தலைவர் அடிக்கல் நாட்டினார்
ராணிப்பேட்டை மாவட்டம்
09.07.22
நெமிலி ஒன்றியம்
சித்தேரி ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை இருந்து வந்தது இந்த நிலையில் புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டி தர பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர் இவர்களது கோரிக்கையை ஏற்று
அதனை நிறைவேற்றித் தரும் வகையில் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு சித்தேரி ஊராட்சியில் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தின் 15வது நிதிக்குழு மான்யத்திலிருந்து ரூ.19,00,000/-மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேநீர் தேக்க
தொட்டி கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார் இந்த நிகழ்வின் போது சித்தேரி ஊராட்சி மன்றத் தலைவர் கலைஞ்செழியன், சண்முகம், சின்னப்பா, முஹம்மது அப்துல் ரஹ்மான் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,கட்சிப் பிரமுகர்கள் திரளாய் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.