ஊராட்சி மன்றத்தை இயக்க விடுவோமா?
சாத்தூர் தலைவருக்கு
துணைத் தலைவரும் அவரின் ஆதரவாளர்களும் தொடந்து தொல்லை
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஒன்றியம், சாத்தூர் ஊராட்சியில்
ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த சா.மா.சேட்டு என்பவரை மக்கள் பணி
செய்யவிடாமல் துணைத்தலைவரான கே.இளங்கோவன் என்பவர் தடுத்து வருவதாக
ஊராட்சி மன்ற தலைவர் சேட்டு மாவட்ட ஆட்சியர்
அலுவலகம், சார் ஆட்சியர்
அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் போன்ற இடங்களில் தொடர்ந்து மனு
கொடுத்து வந்தது செய்தித்தாள்களில் அவ்வப்போது வெளியானது. எதற்காக
இவருக்கு தொடர்ந்து மக்கள் பணி செய்யவிடாமல் தொல்லை கொடுத்து
வருகின்றனர்.
இதற்கு காரணம் என்ன? என்ற களஆய்வில் ஈடுபட்டபோது பல
திடுக்கிடும் சம்பவங்கள் கிடைக்கப்பெற்றன.
சுதந்திரம் பெற்ற பிறகு சாத்தூர் ஊராட்சியில் முதல்முறையாக
ஆதிதிராவிடர்களுக்கான தனித்தொகுதி ஊராட்சியாக ஒதுக்கப்பட்டு கடந்த 2021ல்
நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில், ஊராட்சி மன்ற தலைவருக்கு வேட்பாளராக
இரண்டு பேர் போட்டியிட்டுள்ளனர்.
போட்டியிட்ட இரண்டு பேரில் எம்.வீரப்பா
என்பவரை மாற்று சமுதாயத்தினர் ஒன்றுசேர்ந்து எம்.பி.சி. (ஒட்டர்) சமூகத்தைச்
சேர்ந்தவரை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் 1988-ல் பெற்ற போலி சாதி சான்றிதழை
வைத்து போட்டியிட வைத்ததாக கூறப்படுகிறது. மற்றொரு வேட்பாளரான
ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த சா.மா.சேட்டுக்கு தேர்தல்
நேரத்திலேயே தொந்தரவு கொடுத்துள்ளனர்
இருந்தாலும் மக்கள் இவர் மீது
நம்பிக்கை வைத்து வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர் போலி சாதிச்சான்று
கொடுத்து எதிர் வேட்பாளராக போட்டியிட்ட எம்.வீரப்பா மீது சா.மா.சேட்டு மாவட்ட
ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி
புகார் மனு அளித்து சட்ட போராட்டம் நடத்தி வருவதாக சொல்கின்றனர்.
கடந்த அக்டோபர் 2021-ல் இவர் தலைவராக பதவி ஏற்ற பிறகு,
துணைத்தலைவராக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த கே.இளங்கோவன்
என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்பத்திலிருந்தே எஸ்.சி. தலைவர் என்பதால்
மன்ற நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தராமல் அவரை புறக்கணிக்கின்ற வகையில்
சாதிய வன்மத்துடன் மரியாதை இல்லாமல் ஆபாச வார்த்தைகளால் பேசுவது
போன்ற செயல்களில் ஈடுபட்டு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
சாதி இந்துக்கள் பகுதிக்கு தலைவர் எந்த வேலையும் செய்யக்கூடாது,
நான்தான் செய்வேன் என சொல்லி மிரட்டிவந்ததாகச் சொல்கிறார்கள் செய்யாத வேலைக்கு
பில் வைத்து பணம் தரும்படி கேட்டு வந்திருக்கிறார் முறையாக
வேலை செய்த செலவினங்களுக்கு துணைத்தலைவர் பி.எம்.எஸ்.-ல் கையெழுத்து
போட மறுத்து வந்ததாக சொல்லப்படுகிறது
இதனால் தொடர்ந்து மக்கள் பணி செய்வது இவரால் தடைப்பட்டு
வந்திருக்கிறது மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்ய முடியாமல்
தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக சொல்கிறார்கள் பெரிய ஏரிக்கரை மீதுள்ள கருவேல
மரங்களை அவரே ஆள்வைத்து வெட்டி விற்பனை செய்திருக்கிறார்
2022 ஜனவரி 26 குடியரசு தின விழாவில் எஸ்.சி. தலைவரை கொடியேற்ற
விடாமல் தடுத்து தகராறு செய்திருக்கிறார் அதனைத் தொடர்ந்து தேசிய ஊரக
வேலை உறுதி திட்டத்தில் சாத்தூர் உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர்
அமைக்க 26 லட்சம் செலவில் கட்டிட பூமி பூஜை செய்ய சென்ற ஊராட்சி மன்றத் தலைவர் சேட்டுவை
துணைத்தலைவர் இளங்கோவன் தனது அடியாட்களுடன் தடுத்து நிறுத்தி தகராறு செய்து
மிரட்டியதாக கூறப்படுகிறது
எனது ஊர் வேலை, நான் தான் செய்வேன் என்றும் , நீ இங்கே
வரக்கூடாது என்று தலைவரை அவமானப்படுத்தி பூஜை பொருட்களை பையில்
போட்டு துரத்தி அடித்திருக்கிறார்.
மேலும் துணைத்தலைவர் இளங்கோவன் தலைவரின் அனுமதி இல்லாமல்,
பஞ்சாயத்து தீர்மானம் இல்லாமல் தன்னிச்சையாக தனது ஆதரவாளர்களான திமுக
கிளைச் செயலாளர் சரவணன், ஒன்றிய பிரதிநிதி அன்பு, மூர்த்தி, சுதாகர், அதிமுக
கவுன்சிலர் ஜெயகாந்தன் போன்ற நபர்களுடன் சேர்ந்து உயர்நிலைப் பள்ளிக்கு
மண் கொட்டுவதாக சொல்லி சித்தேரியில் டிராக்டர் மூலம் 500 லோடு மண்
எடுத்து லட்சக்கணக்கில் விற்பனை செய்ததாக சொல்லுகிறார்கள்
பெரிய ஏரியில் பொதுப்பணித்துறை மூலமாக விடப்பட்ட மீன் ஏலத்தினை
அவருடைய பெயரிலேயே எடுத்து சட்டத்தை மீறி விற்பனை செய்து வந்திருக்கிறார்.
சாத்தூர் ஊராட்சியில் உள்ள சுமார் 21 புளிய மரங்களை இவரே தனது
ஆதரவாளர்களுக்கு புளி பங்கு போட்டுக் கொள்ள காரணமாக இருந்திருக்கிறார்
தி.மு.க. ஆற்காடு கிழக்கு ஒன்றிய
செயலாளர் எம்.வி.பாண்டுரங்கன் ஊராட்சி மன்ற தலைவர் சேட்டுவிடம் சாத்தூர் ஊராட்சியில் வந்த வேலையை எனக்கு கொடுத்து விடு, உனக்கு ஏதோ பார்த்து கமிஷன் தருகிறேன் உன்னாலே எல்லாம் இந்த வேலையை செய்ய முடியாது என்று கேட்டதாக சொல்லுகிறார்கள்
அதனை தலைவர் மறுத்ததாகச் கூறூகிறார்கள் இதனால் மேற்கண்ட நபர்களை வைத்து பள்ளி கட்டிட பணி செய்யவிடாமல் உராட்சி மன்றத்தை இயக்கக விடாமலும் வெறுப்பு அரசியலையும், சாதி அரசியலையும் கையிலெடுத்து ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன்
மேற்கண்ட நபர்களுடன்
உள்குத்து வேலையில் ஈடுபட்டு வருவதாக சொல்கிறார்கள் ஊராட்சி மன்ற நிர்வாக பணிகளை தடுத்து நிறுத்தி வரும் இவர்கள் கட்சியின் பெயரால் மாறுபட்டு
இருந்தாலும், சாதியின் பெயரால் ஒருங்கிணைந்து செயல்பட்டது தெரியவந்தது
இதுகுறித்து துணைத் தலைவர் இளங்கோவனிடம் விசாரித்தபோது நீங்களும் உங்களை சார்ந்த ஆதரவாளர்களும் சாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சா.மா சேட்டிற்கு ஊராட்சியில் வந்த வேலையான அரசினர் உயர்நிலைப் பள்ளி கட்டிட வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க பூஜை செய்ய வந்தபோது தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது இது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது அவர் கூறியதாவது நானும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும்,ஒரு சில நபர்களும் சேர்ந்து கட்டுமான பணியை தடுத்து நிறுத்தியதற்கு காரணம் என்னவென்றால் பள்ளி வளாகத்திற்கு சொந்தமான இடத்தை எங்கள் கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர் ஆக்கிரமிப்பு செய்த நபர்களை காலி செய்ய சொல்லி 30 வருடங்களாக போராடி வருகிறோம் தற்போது இதற்கான முயற்சி செய்து நானும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் ஒன்றினைந்து ஆக்கிரமிப்பு செய்துள்ள வீட்டுக்காரர்களிடம் காவல் நிலையம் வரை சென்று போராடி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர், சார் ஆட்சியர் ஆகிய அதிகாரிகளை கொண்டு போராட்டத்தின் மத்தியில் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆக்கிரமிப்பு செய்த அவர்களுக்கு மாற்று இடத்தில் இடம் வழங்க உதவி செய்தோம் இந்தப் போராட்டத்தில்லெல்லாம் பங்கு எடுக்காத தலைவர் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு மட்டும் வந்து நிற்கும் போது நாங்கள் எப்படி அதை அனுமதிக்க முடியும் அதனால்தான் தடுத்து நிறுத்தினோம் என்றார் தொடர்ந்து பேசிய அவர் மேலும் தலைவர் பள்ளி வளாகத்தில் பள்ளமான இடத்திற்கு மண் அடித்து நிரப்புவதற்காக எங்கள் கிராமத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று ஏரியில் மண் எடுத்து பள்ளத்தை நிரப்பினோம் இந்த நிகழ்வின்போது பள்ளி வளாகத்தில் இருந்த புங்க மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினோம் மண் எடுத்த எங்களை சமூகவிரோதிகள் என்று பத்திரிக்கையில் செய்தி போட்டதாகவும் லட்சக்கணக்கில் புங்க மரங்கள் வெட்டி விற்றதாகவும் எங்கள் மீது புகார் அளித்தார் என்று கூறினார் மேலும் அவரிடம் ஊராட்சி கூட்டங்களை வேண்டுமென்றே தடுத்து நிறுத்தியதாகவும் செய்யாத வேலைக்கு பில் வைத்து பணம் கேட்பதாகலவும் சொல்லுகிறார்கள் அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது நான் பாமகவை சேர்ந்தவன் எங்கள் கட்சி அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தது தலைவர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால் தலைவர் பதவிக்கு போட்டியிடும் போது அவருக்காக உண்மையாக வேலை செய்து 900 வாக்குகள் மேல் பெற்றுத் தந்து வெற்றி பெறச் செய்தோம் எங்கள் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அவர்கள் பகுதியில் இருக்கும் குறைகள் எல்லாம் என்னிடம் சொல்வார்கள் நான் அதை தலைவரிடம் சொல்லுவேன் சொல்லியும் பொது மக்களுக்கான தேவைகளை நிவர்த்தி செய்தால் நானே வேலை செய்து பில் கொடுத்து அதற்கான பணத்தை கேட்பதைத் தவிர மற்றொன்றும் இல்லை என்றார்
அதனைத் தொடர்ந்து திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கனிடம் சாத்தூர் ஊராட்சிக்கு வந்த ரூபாய் இருபத்தி ஏழு லட்சம் மதிப்பீட்டிலான வேலையை தடுத்து நிறுத்துவதற்கு நீங்கள் உறுதுணையாக இருந்ததாக சொல்லப்படுகிறது அந்த ஊராட்சியில் உங்களுடைய தலையீடு அதிகமாக இருப்பதாகவும் சொல்லுகிறார்கள் இது பற்றி உங்கள் கருத்து என்ன
என்று கேட்டபோது அவர் கூறியதாவது ஆமாம் அந்த கிராமத்திற்கு கட்சிக்காரர்கள் என்னை அழைத்தார்கள் நான் சென்றேன் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களும் கட்சிக்காரர்களும் பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு பூஜை செய்தார்கள் கட்சி கட்சிக்காரர்கள் அழைக்கும்போது நான் மறுக்க முடியாது என்றார் கட்சிக்காரர்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக செயல்படும் ஒவ்வொரு காரியத்திலும் கலந்து கொள்வீர்களா ? என்று கேட்டபோது கட்சிக்காரர்கள் ஒன்றும் ஞாயம் இல்லாமல் எந்த காரியத்தையும் செய்யவில்லை பஞ்சாயத்திற்கு வேலை வருகிறது என்றால் கட்சிக்காரர்களுக்கு 30% அதிகாரிகளுக்கு 10% வார்டு உறுப்பினர்களுக்கு 10% ஊராட்சிமன்றத் துணைத் தலைவருக்கு 30% , மீதம் உள்ளது தலைவருக்கு இப்படி ஒத்துழைத்து வேலை செய்யவேண்டும் அதை விட்டுவிட்டு நான்தான் செய்வேன் எனக்கு வந்த வேலையை நான் விடமாட்டேன் என்று சொல்வது நியாயம் கிடையாது கட்சிக்காக உழைக்கும் நபர்களுக்கு நான் என்ன பதில் சொல்லுவது இப்படி அவர் செய்யாத வரைக்கும் அவருக்கு எதிர்ப்பு வரத்தான் செய்யும் என்றார் நீங்கள் வேண்டுமானால் பக்கத்து ஒன்றியமான வெம்பாக்கம் ஒன்றியத்திற்கு சென்று அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து வாருங்கள் உங்களுக்கு அப்போது தான்

இந்த சம்பவம் குறித்து
சாத்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் இளங்கோவிடம் தொடர்பு கொண்டு கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது
இதுகுறித்து துணைத் தலைவர் இளங்கோவனிடம் விசாரித்தபோது நீங்களும் உங்களை சார்ந்த ஆதரவாளர்களும் சாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சா.மா சேட்டிற்கு ஊராட்சியில் வந்த வேலையான அரசினர் உயர்நிலைப் பள்ளி கட்டிட வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க பூஜை செய்ய வந்தபோது தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது இது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது அவர் கூறியதாவது நானும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும்,ஒரு சில நபர்களும் சேர்ந்து கட்டுமான பணியை தடுத்து நிறுத்தியதற்கு காரணம் என்னவென்றால் பள்ளி வளாகத்திற்கு சொந்தமான இடத்தை எங்கள் கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர் ஆக்கிரமிப்பு செய்த நபர்களை காலி செய்ய சொல்லி 30 வருடங்களாக போராடி வருகிறோம் தற்போது இதற்கான முயற்சி செய்து நானும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் ஒன்றினைந்து ஆக்கிரமிப்பு செய்துள்ள வீட்டுக்காரர்களிடம் காவல் நிலையம் வரை சென்று போராடி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர், சார் ஆட்சியர் ஆகிய அதிகாரிகளை கொண்டு போராட்டத்தின் மத்தியில் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆக்கிரமிப்பு செய்த அவர்களுக்கு மாற்று இடத்தில் இடம் வழங்க உதவி செய்தோம் இந்தப் போராட்டத்தில்லெல்லாம் பங்கு எடுக்காத தலைவர் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு மட்டும் வந்து நிற்கும் போது நாங்கள் எப்படி அதை அனுமதிக்க முடியும் அதனால்தான் தடுத்து நிறுத்தினோம் என்றார் தொடர்ந்து பேசிய அவர் மேலும் தலைவர் பள்ளி வளாகத்தில் பள்ளமான இடத்திற்கு மண் அடித்து நிரப்புவதற்காக எங்கள் கிராமத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று ஏரியில் மண் எடுத்து பள்ளத்தை நிரப்பினோம் இந்த நிகழ்வின்போது பள்ளி வளாகத்தில் இருந்த புங்க மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினோம் மண் எடுத்த எங்களை சமூகவிரோதிகள் என்று பத்திரிக்கையில் செய்தி போட்டதாகவும் லட்சக்கணக்கில் புங்க மரங்கள் வெட்டி விற்றதாகவும் எங்கள் மீது புகார் அளித்தார் என்று கூறினார் மேலும் அவரிடம் ஊராட்சி கூட்டங்களை வேண்டுமென்றே தடுத்து நிறுத்தியதாகவும் செய்யாத வேலைக்கு பில் வைத்து பணம் கேட்பதாகலவும் சொல்லுகிறார்கள் அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது நான் பாமகவை சேர்ந்தவன் எங்கள் கட்சி அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தது தலைவர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால் தலைவர் பதவிக்கு போட்டியிடும் போது அவருக்காக உண்மையாக வேலை செய்து 900 வாக்குகள் மேல் பெற்றுத் தந்து வெற்றி பெறச் செய்தோம் எங்கள் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அவர்கள் பகுதியில் இருக்கும் குறைகள் எல்லாம் என்னிடம் சொல்வார்கள் நான் அதை தலைவரிடம் சொல்லுவேன் சொல்லியும் பொது மக்களுக்கான தேவைகளை நிவர்த்தி செய்தால் நானே வேலை செய்து பில் கொடுத்து அதற்கான பணத்தை கேட்பதைத் தவிர மற்றொன்றும் இல்லை என்றார்
அதனைத் தொடர்ந்து திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கனிடம் சாத்தூர் ஊராட்சிக்கு வந்த ரூபாய் இருபத்தி ஏழு லட்சம் மதிப்பீட்டிலான வேலையை தடுத்து நிறுத்துவதற்கு நீங்கள் உறுதுணையாக இருந்ததாக சொல்லப்படுகிறது அந்த ஊராட்சியில் உங்களுடைய தலையீடு அதிகமாக இருப்பதாகவும் சொல்லுகிறார்கள் இது பற்றி உங்கள் கருத்து என்ன
என்று கேட்டபோது அவர் கூறியதாவது ஆமாம் அந்த கிராமத்திற்கு கட்சிக்காரர்கள் என்னை அழைத்தார்கள் நான் சென்றேன் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களும் கட்சிக்காரர்களும் பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு பூஜை செய்தார்கள் கட்சி கட்சிக்காரர்கள் அழைக்கும்போது நான் மறுக்க முடியாது என்றார் கட்சிக்காரர்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக செயல்படும் ஒவ்வொரு காரியத்திலும் கலந்து கொள்வீர்களா ? என்று கேட்டபோது கட்சிக்காரர்கள் ஒன்றும் ஞாயம் இல்லாமல் எந்த காரியத்தையும் செய்யவில்லை பஞ்சாயத்திற்கு வேலை வருகிறது என்றால் கட்சிக்காரர்களுக்கு 30% அதிகாரிகளுக்கு 10% வார்டு உறுப்பினர்களுக்கு 10% ஊராட்சிமன்றத் துணைத் தலைவருக்கு 30% , மீதம் உள்ளது தலைவருக்கு இப்படி ஒத்துழைத்து வேலை செய்யவேண்டும் அதை விட்டுவிட்டு நான்தான் செய்வேன் எனக்கு வந்த வேலையை நான் விடமாட்டேன் என்று சொல்வது நியாயம் கிடையாது கட்சிக்காக உழைக்கும் நபர்களுக்கு நான் என்ன பதில் சொல்லுவது இப்படி அவர் செய்யாத வரைக்கும் அவருக்கு எதிர்ப்பு வரத்தான் செய்யும் என்றார் நீங்கள் வேண்டுமானால் பக்கத்து ஒன்றியமான வெம்பாக்கம் ஒன்றியத்திற்கு சென்று அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து வாருங்கள் உங்களுக்கு அப்போது தான் புரியும் என்றார்.
அதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சாமா சேட்டுவை தொடர்பு கொண்டு உங்கள் ஊராட்சியில் என்னதான் நடக்கிறது அடிக்கடி அதிகாரிகளிடம் மனு கொடுத்து வருகிறீர்கள் என்று கேட்டபோது அவர் கூறியதாவது கிட்டத்தட்ட 40 வருடத்திற்கு பிறகு எங்கள் ஊராட்சியில் எஸ்சி மக்களுக்கு தலைவர் பதவிக்கு வாய்ப்பு கிடைத்தது இதனைப் பயன்படுத்தி எத்தனையோ கஷ்டத்தின் மத்தியில் தலைவர் பதவிக்கு வந்தேன் ஆனால் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக எங்கள் ஊராட்சியை சேர்ந்த துணைத் தலைவர் இளங்கோவன் ஊராட்சி பணிகளை செய்ய விடாமல் தனது ஆதரவாளர்களுடன் எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார் முதலில் ஊராட்சி செயலாளர் தொலை கொடுத்தார் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார் அதன் பிறகு துணைத் தலைவரும் அரின் ஆதரவாளர்களும் ஒன்றிணைந்து என்னை ஊராட்சியில் எந்த பணியும் செய்யவிடாமல் தடுத்து வருகிறார்கள், சாதிய வன்மத்துடன் நடந்து கொல்கிறார்கள், மரியாதை இல்லாமல் நடத்துகிறார்கள், துணைத்தலைவர்,
அவர் செய்யாத வேலைக்கு, வேலை செய்ததாக சொல்லிக் பில் கொண்டு வந்து என்னிடம் பணம் கேட்கிறார் என்றார் மேலும் அவர் பேசியபோது சாத்தூர் ஊராட்சியில் பள்ளி வளாக சுற்றுச்சுவர் அமைக்கும் பணி எனக்கு வந்தது அந்தப் பணியினை திமுக ஆற்காடு கிழக்கு ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன் அந்த வேலையை நான் செய்கிறேன் எனக்கு கொடுத்து விடு நானா பார்த்து ஏதாவது கமிஷன் தருகிறேன் வாங்கிட்டுப் போயிடு என்று
கேட்டார் நான் மறுத்துவிட்டேன்,பாண்டுரங்கன்
இதனை மனதில் வைத்துக் கொண்டு சாத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இளங்கோவன் மற்றும் திமுக கிளை கழக செயலாளர் மாற்றுக் கட்சியை சேர்ந்த எல்லாரையும் ஒருங்கிணைத்து எனக்கு விரோதமாய் எழுப்பி ஊராட்சி மன்ற கூட்டத்தையும் நடக்கவிடாமல் எனக்கு வந்த வேலையையும் செய்ய விடாமல் தடுத்து வருகிறார் இதனால் நான் மன உளைச்சளாகி மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் என்றார் துணைதவர் இளங்கோவன் அடிக்கடி,அடிக்கடி
என்னிடம் ஊராட்சி மன்ற கூட்டத்தை நடத்தவிடுவோமா,வேலையை செய்ய விடுவோமா என்று சொல்லி தடுத்தும் வருகிறார் என்றார்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட ஊராட்சி மன்றத் தலைவர்களும் இதே நிலைமைதான் சமத்துவம் ,சகோதரத்துவம், சமூக நீதியை நிலைநாட்ட எத்தனை சீர்திருத்தவாதிகள், தலைவர்கள் தோன்றினாலும், இதுபோன்று வெறுப்பு அரசியலையும், சாதி அரசியலையும் கையிலெடுக்கும் நபர்கள் திருந்தாத வரையில் இந்த நிலை நீடிக்கும் என்பது எத்தனை உண்மையானது.
சாத்தூர்
ஊராட்சி மன்ற தலைவர் சேட்டுவின் நிலைமை அந்தோ! பரிதாபம்.