தேனி மாவட்ட சிறப்புகள்தேனி மாவட்டம், தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் தேனி ஆகும்.தேனி மாவட்டம் தமிழக அரசின் வருவாய்த்துறை அரசு ஆணை எண் 679, நாள் ஜூலை 25, 1996 இன் மூலம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தேனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது.*

எங்கள் ஊர் தேனி

      07 ஜூலை 2022
தேனி மாவட்டம் உருவான நாள்
.............................................................
தேனி மாவட்ட சிறப்புகள்
தேனி மாவட்டம், தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் தேனி ஆகும்.தேனி மாவட்டம் தமிழக அரசின் வருவாய்த்துறை அரசு ஆணை எண் 679, நாள் ஜூலை 25, 1996 இன் மூலம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தேனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது

 தேனி மாவட்ட உருவாக்கத்திற்காக இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான டாக்டர். கே. சத்யகோபால் தனி அதிகாரியாக முதலில் நியமிக்கப்பட்டார். பின்னர் அவரே முதல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.*

 *தேனி மாவட்டம் ஜனவரி 1, 1997 முதல் செயல்படத் துவங்கியது.தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு, இந்தியாவில் முதன் முறையாக சர்வதேசத் தரச்சான்று (ஐ.எஸ்.ஓ.,-9001) விருது வழங்கப்பட்டுள்ளது.* 

 _*எல்லைகள்:*_ 

 *வடக்கில் திண்டுக்கல் மாவட்டத்தையும், கிழக்கில் மதுரை மாவட்டத்தையும், தெற்கில் கேரள மாநிலம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தையும், மேற்கில் கேரள மாநிலத்தையும் தேனிமாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.* 

*வருவாய்த்துறை அமைப்புகள் தேனி மாவட்ட வருவாய்த்துறையில் பெரியகுளம், உத்தமபாளையம் இரண்டு வருவாய்க் கோட்டங்கள், இந்த வருவாய்க் கோட்டங்களின் கீழ் தேனி,பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர் என்று ஐந்து தாலுகா அலுவலகங்கள் அமைக்கப்பட்டு உள்ளது*.

 _*உள்ளாட்சி அமைப்புகள்:*_ 

 *தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள்(முன்பு சிறப்பு கிராமப் பஞ்சாயத்துகள்), 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களும், இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் கீழ் 130 கிராமப் பஞ்சாயத்துக்களும் என உள்ளாட்சி அமைப்புகள் பிரிக்கப்பட்டுள்ளன.* 

 *மக்கள் வகைப்பாடு 2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி தேனி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 12,45,899 ஆகும். இவர்களில் 6,25,683 ஆண்கள். 6,20,216 பெண்கள் ஆவார்கள். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 991 பெண்கள், இது தேசிய சராசரியான 929-யை விட மிக அதிகம் ஆகும். மொத்த மக்கள் தொகையில் 1,19,661 பேர் ஆறு வயதிற்கும் கீழானவர்கள். மாவட்டத்தின் சராசரி கல்வியறிவு தேசிய சராசரியான 72.99% ஐ ஒப்பிடும் போது, அதை விட அதிகமாக 77.26%உள்ளது.*

 *இதில் ஆண்களில் கல்வியறிவு பெற்றோர் 85.03% ஆகவும், பெண்களில் கல்வியறிவு பெற்றோர் 69.46% ஆகவுமாக உள்ளனர். 2011-ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.*

 *மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 11,48,990 (92.22%) ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 56,751 (4.56%), கிருஸ்துவர்கள் 37,574 (3.02%), மதம் குறிப்பிடாதோர் 2,251, சீக்கியர்கள் 152, புத்த மதத்தினர் 79, சமணர்கள் 28 மற்றவர்கள் 74 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றனர்.* 

 _*கல்வி நிறுவனங்கள்:*_ 

 *_பள்ளிகள்:_* 

 *தேனி மாவட்டத்தில் பெரியகுளம், உத்தமபாளையம் எனும் இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இரு கல்வி மாவட்டங்களும் இணைந்த தேனி முதன்மைக் கல்வி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் 46, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் 23, அரசு உயர்நிலைப்பள்ளிகள் 40, அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள் 15 மற்றும் சுயநிதி ஆங்கிலவழிக் கல்வி அளிக்கும் பல மேல்நிலைப் பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகளும் உள்ளன.* 

 *கல்லூரிகள்:* 

 *தேனி மாவட்டத்தில், தேனியில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி, பெரியகுளத்தில் ஒரு அரசு தோட்டக்கலைக் கல்லூரி, போடி, உத்தமபாளையம், பெரியகுளம் ஆகிய இடங்களில் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகள், ஆண்டிபட்டி,கோட்டூர் ஆகிய இடங்களில் மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரிகள் மற்றும் 5 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், உடற்கல்வியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் உள்ளன.* 

 *தொழிற்பயிற்சி நிலையம்:* 

 *தேனியில் ஒரு அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆண்டிபட்டியில் ஒரு அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை உள்ளன. இவை தவிர சில சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.* 

 *அரசு மருத்துவமனைகள்   தேனி மாவட்டத்தில் சுகாதாரப் பணிகளுக்காக 1 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 6 அரசு மருத்துவமனைகள், 25 ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் 162 துணைச் சுகாதார மையங்கள் மற்றும் ஒரு மாவட்டக் காசநோய் மையம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.* 

 *சுற்றுலாத் தலங்கள்:* 

 _*வைகை அணை:*_ 

 *வைகை அணை என்பது தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டிக்கு அருகில் பாயும் வைகை ஆற்றிற்குக் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டு ஆகும். இவ்வணைக்கட்டு மதுரை மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் ஆகியவற்றிற்கு விவசாயத்துக்குத் தேவையான நீரையும் ஆண்டிப்பட்டி மற்றும் மதுரை நகரங்களுக்குத் தேவையான குடிநீரையும் வழங்கி வருகிறது.* 

 *நீர்த்தேக்கம்:* 

 *தேனி மாவட்டத்தில் வருசநாடு மலைப்பகுதியில் உருவாகி ஓடி வரும் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வைகை அணை 1959 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. இந்த அணை 111அடி உயரம் உடையது. இந்த அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் 71அடி நீரைத் தேக்கி சேமித்து வைக்க முடியும்.* 

 *பூங்காக்கள் வைகை அணையின் இருபுறமும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல வசதியாக அழகிய பூங்காக்கள அமைக்கப்பட்டுள்ளன.இந்த அணையின் முன்புறமுள்ள சிறிய பாலத்தின் வழியே இரு புறமும் உள்ள பூங்காக்களுக்குச் செல்ல முடியும். இந்தப் பூங்காவின் ஒரு பகுதியில் சிறுவர்கள் விளையாடி மகிழ்வதற்கான விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஒரு பூங்காவில் தண்ணீர் ஆறு போல் மேலிருந்து கீழ் வரை வரும்படி செயற்கை அமைப்பும் செய்யப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் சில மீட்டர் தூரம் வரை பாய்ந்து இறுதியில் சின்ன அணை போன்ற அமைப்பின் வழியாக வெளிவந்து ஒரு அரக்கன் வாயின் வழியே வெளியேறும்படி செய்யப்பட்டுள்ளது. இந்த செயற்கை வடிவமைப்பில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் முக்கிய விடுமுறை நாட்களில் மட்டும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.* 

 *மிருகக் காட்சி சாலை வைகை அணைப் பகுதியிலுள்ள பூங்காவை அடுத்து ஒரு மிருகக்காட்சி சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மிருகக்காட்சி சாலையைப் பார்வையிட தனிக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.*

 *இந்த மிருகக் காட்சி சாலை சரியான பராமரிப்பின்றி நிறைய கூண்டுகள் காலியாக உள்ளன. ஒரு சில பறவைகள், மான், முயல், எலி, பாம்பு என்று அடிக்கடி வெளியில் பார்வையிடும் இனங்களே இக்காட்சி சாலையில் இடம் பெற்றுள்ளன.* 

 *நீர்மின் உற்பத்தி நிலையம் வைகை அணையின் கீழ் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் விசை மூலம் மின் உற்பத்தி செய்யும் வைகை நீர்மின் சக்தி திட்டம் ஒன்று தமிழ்நாடு மின்சார வாரியத்தினால் செய்யப்பட்டு வருகிறது.* 

 *இந்த நீர்மின் உற்பத்தி நிலையத்திற்குள் சென்று பார்வையிட அனுமதி இல்லை.* 

 *ஆய்வு நிறுவனம்:* 

 *அரிசி,சோளம் உள்ளிட்ட பல்வேறு வகையான தானிய வகைகளை ஆராய்வதற்காக வைகை அணைக்கட்டுக்கு அருகே தமிழ்நாடு அரசு ஒரு விவசாய ஆராய்ச்சி மையம் ஒன்றை அமைத்துள்ளது.* 

 *முல்லைப் பெரியாறு அணை:* 

 *மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும்.*

*இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இது கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும், தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையை பராமரித்து வருகிறது.1895 ஆம் ஆண்டு இது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி மற்றும் உயரம் 155 அடி ஆகும். இந்த அணையின் நீர்பிடி பகுதியில் வன சரணாலயம் தேக்கடி உள்ளது.*

 *இதன் கீழ்பாசனத்தில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை, சுண்ணாம்பு சுர்க்கி கலவையில் கருங்கல்லில் கட்டப்பட்ட அணை ஆகும்.மெட்ராஸ் மாகாணத்திற்கும் தண்ணீரை திருப்பி விவசாயப்பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு பெரியாறு திட்டத்தின் கீழ் அப்போதைய சென்னை மாகாணத்திற்கும் திருவிதாங்கூர் அரசருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.*

 *1886 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கையொப்பமிடப்பட்ட இந்த பெரியாறு குத்தகை ஒப்பந்தந்தின்படி ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஐந்து ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில் 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டதால் முதலில் பெரியாறு அணை என்றழைக்கப்பட்ட இவ்வணை, முல்லையாறு மற்றும் பெரியாறு இரண்டும் சேருமிடத்தின்கீழ் அமைந்துள்ளதால் இரு ஆறுகளின் பெயர்களையும் இணைத்து முல்லைப் பெரியாறு அணை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.* 

 *மின் உற்பத்தி:* 

 *1955-ம் ஆண்டு பெரியாறு தண்ணீர் தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் மின் உற்பத்தி செய்வதற்கு ஒரு திட்டம் வகுக்கப் பெற்றது. 1970-ம் ஆண்டு கேரளத்துடன் செய்து கொண்ட புது ஒப்பந்தத்தின் படி இங்கு தமிழகம் 140 மெகா வாட் திறன் கொண்ட மின் நிலையத்தை அமைத்துள்ளது.*

 *இது தமிழகத்திற்கு வரும் நீரை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாகும். அணைப் பயன்பாடு இந்த அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் தேனி,திண்டுக்கல், மதுரை,சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலுள்ள 2,08,144 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.*

 *தேனி மாவட்டத்தில் இருக்கும் கூடலூர், கம்பம்,சின்னமனூர் மற்றும் தேனி - அல்லிநகரம் ஆகிய நான்கு நகராட்சிகளுக்கும், இந்த ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளிலிருக்கும் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளின் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றுகிறது. இது தவிர மதுரை மாநகராட்சியின் குடிநீர்த் தேவையையும், உசிலம்பட்டி, வாடிப்பட்டி மற்றும் சேடப்பட்டி ஒன்றியப் பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கான தனிக் குடிநீர்திட்டம் மூலம் இப்பகுதிகளின் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றி வருகிறது.* 

 *சோத்துப்பாறை அணை தமிழ்நாடு,  தேனி மாவட்டத்தின் தலைநகரமான தேனியிலிருந்து சுமார் 24 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த அணை வராக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.*

 _*அருகாமையில் உள்ள இடங்கள்:*_

 *பெரியகுளம்,தேனி, அல்லிநகரம், கொடைக்கானல், மதுரை ஆகியன. சுற்றுலா தலமான இந்த அணைப்பகுதி, நீர் நிரம்பியிருக்கும் போது கண்கொள்ளா காட்சியாக விளங்கும்.* 

 *சுருளி அருவி:* 

 *சுருளி அருவி தமிழ்நாடு, தேனி மாவட்டத்தில் உத்தமபாளையத்திலிருந்து 18 கி.மீ தொலைவிலும், கம்பம் நகரிலிருந்து 8 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள ஒரு சுற்றுலாத்தலம்.*
 
 *40 அடி உயரம் உள்ள இவ்வருவியில் ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் நீர்ப் போக்குவரத்து அதிகமாய் இருப்பதால் அப்போது நிறைய மக்களைக் காணலாம்.* 

 *இங்குள்ள சுருளியாண்டவர் கோயில் புகழ்பெற்றது. சிலப்பதிகாரத்தில் இவ்வருவி குறிப்பிடப்பட்டுள்ளது.*

 *இங்கு கீழ்ச்சுருளி, மேல்ச்சுருளி என இரு இடங்கள் உள்ளன.* 

 *சுருளி வேலப்பர் கோயில்:* 

 *இங்கு சுருளிவேலப்பர் கோவிலும் கைலாய குகையும் உள்ளன. இங்குள்ள கைலாய குகையில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வந்து இருந்ததாகக் கூறப்படுகிறது.*

 *இங்கு இமயகிரிச் சித்தர் என்பவர் தவமியற்றியதாகவும் கூறப்படுகிறது. மேற்கு தொடர்ச்சிமலையின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் இந்த இடம் இந்துக்களின் புனிதத்தலமாகவும் கருதப்படுகிறது.*

 *மிகவும் பழமையான மரங்கள் காலத்தின் மாறுதலால் படிவங்களாக உருமாறி உள்ளது. புண்ணிய தலம் இந்த மலைக்குகைகளில் இந்து சமயக் கடவுள்களாகக் கருதப்படும் முப்பத்து முக்கோடி தேவர்களும், எண்பத்து மூன்றாயிரம் ரிஷிகளும் தங்கியிருந்ததாகக் கருதப்படும் கயிலாய மலைக் குகை இருப்பதால் இங்கு புண்ணியாதானம் செய்யப்படும் இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய அவர்கள் உதவுவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது.*

 *இதனால் சுருளி நீர் வீழ்ச்சியின் அடிவாரப் பகுதியில் இறந்தவர்களுக்கான இறுதிக்கடன்களில் ஒன்றான புண்ணியாதானம் செய்யும் நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறுகிறது.* 

 *கோடிலிங்கம் சுருளி நீர்வீழ்ச்சி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சுருளி மலைச் சாரலில் உள்ளது. கோடிலிங்கம் லிங்கபர்வதவர்த்தினி கோயில். தனியார் அறக்கட்டளை ஒன்றின் மூலம் நிறுவப்பட்டுள்ள இந்தக் கோயிலில் கோடிலிங்கம் வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.*

 *தற்போதைய நிலையில் சிறியதும் பெரியதுமாக சுமார் ஆயிரம் லிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலில் மேலும் பல லிங்கங்கள் வைக்க ஆன்மீக அன்பர்களை வேண்டி விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது.* 

 _*கும்பக்கரை அருவி:*_ 

 *கும்பக்கரை அருவி, இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில், பெரியகுளத்துக்கு அண்மையில் அமைந்துள்ளது. பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதி, இயற்கைச் சூழலிலுள்ள இந்தியாவில் சுற்றுலாத்துறைகளில் ஒன்றாக இப்பகுதி திகழ்கின்றது.*

 *கொடைக்கானல் மலையில் இருந்து உருவாகும் நீரூற்று மலையடிவாரத்தை அடைகிறது. இவ்விடம் கும்பக்கரை எனப்படுகின்றது.* 

 *பெயர்க்காரணம்:* 

 *இப்பகுதியிலுள்ள மாட்சிநாயக்கன், வீரபுத்திரன், வைரவன், பூதநாட்சி, செழும்புநாட்சி, சோத்துமாயன், சின்ன அண்ணன், கருப்பணசாமி ஆகிய வன தெய்வங்கள் இங்குள்ள கரையில் கும்பலாகக் கூடுமாம். அதனால் இது கும்பல்கரை என்று முன்னர் அழைக்கப்பட்டதாம்.*

 *இந்த கும்பல்கரையே இன்று கும்பக்கரை என்று மருவியதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.*
*நீர்வீழ்ச்சியின் பகுதிகள் கும்பக்கரை நீர்வீழ்ச்சிப் பகுதியில் இந்த நீர்வீழ்ச்சி தவிர தண்ணீர் செல்லும் தடங்களிலுள்ள வழுக்குப் பாறை, யானைக் கெஜம், உரல் கெஜம், பாம்பு கெஜம் என்று அழைக்கப்படும் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நீராடி மகிழ்கின்றனர்.* 

 _*மேகமலை:*_ 

 *தேனி மாவட்டம் சின்னமனூர் நகரிலிருந்து மலைப்பாதை வழியாகச் சென்றால் மேகமலையை அடையலாம்.*

 *மேகமலை பெரிய மரங்கள், பசுமையான நிலபரப்புடன், மிக அழகான சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலை மற்றும் காபி பயிர் தோட்டம், உயர்ந்த மலைகளின் அழகு, மிக ஆழமான பள்ளம், அழகிய ஏரிப்பகுதி என பல இயற்கை அழகுக் கொட்டிக் கிடக்கும் இடம் இது.*

 *மேகமலை நாலைந்து மலைச்சிகரங்கள் நடுவே உள்ள ஒரு பள்ளத்தாக்கு. மேகமலை தமிழ்நாட்டில் உள்ள மலைவாச தலங்களில் சிறந்த அமைப்பு கொண்டது.* 

 *மேகமலை தேயிலைத் தோட்டம்:* 

 *ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்குச் சொந்தமான தனி தேயிலைத் தோட்டமாகவும், இத்தேயிலைத் தோட்டங்களில் பறிக்கப்படும் தேயிலைகளை பக்குவப்படுத்தும் தொழிற்சாலையும் இங்கு அமைக்கப்பட்டிருந்தது.*

 *தற்போது இப்பகுதி தனியார் தேயிலை நிறுவனம் ஒன்றின் கட்டுப்பாட்டில் உள்ளது. இம்மலைப்பகுதியின் சாலை உட்பட அனைத்துப் பகுதிகளும் இந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.*

 *தற்போது இந்நிறுவனத்தால் இப்பாதையைச் சரிவர பராமரிக்க முடியாததால் சாலையின் பெரும்பகுதிகள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில் இப்பகுதியின் சாலையைப் பராமரிக்க தேயிலைத்  தோட்ட நிறுவனம் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் ஒப்படைத்து விட்டது.* 

 *நீர்மின்சக்தி திட்டம்:* 

 *இம்மலைப்பகுதியில் ஹைவேவிஸ் எனும் பேரூராட்சி அமைப்பில் ஊர் ஒன்று உள்ளது.*

 *இந்த ஊர் முதலில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் நகரியம் எனும் அமைப்பிலிருந்தது.*

 *இம்மலைப்பகுதியில் வெண்ணியார், இரவங்கலார், மகராசாமெட்டு போன்ற பிற குடியிருப்புப் பகுதிகளும் உள்ளன. இம்மலைப்பகுதியில் உள்ள சுருளியாறு பகுதியில் அமைக்கப்பட்ட அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரிலிருந்து நீர் மின்சக்தி எடுக்கும் சுருளியாறு நீர்மின்சக்தி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.* 

 *வெள்ளி மலை* 

 *வருஷநாடு மலைப்பகுதியில் உள்ள ஒரு பகுதியே வெள்ளி மலை ஆகும். இங்கு பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்குகள் காணப்படுகின்றன.* 

 *போடி மெட்டு:* 

 *போடி மெட்டு என்பது இந்தியாவின் தமிழ் நாடு மாநிலம், தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லை அருகே அமைந்துள்ள ஒரு மலை வாழ் கிராமமாகும். இது மதுரையில் இருந்து கொச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை 49தின் வழியில் அமைந்துள்ளது.*

 *மேலும் இதன் மிக அருகில் மூணார், மறையூர், தேக்கடி, கொடைக்கானல், இடுக்கி அணை ஆகிய மிகப்பிரபலமான சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளது.* 

 _*வழிப்பாட்டுத் தலங்கள்:*_ 

பெரியகுளத்தில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட மிக பழமைவாய்ந்த திருக்கோவிகளான பாலசுப்பிரமணிய திருக்கோவில். மாரியம்மன் கோவில். தையல் பெரியநாயகி மலைமேல் கோவில்- பகவதியம்மன் கோவில் இவற்றில் வடகரை - தென்கரையை பிரித்து நடுவில் நதியாக ஓடும் வராக நதிக்கரையில் அமைந்திருப்பது பாலசுப்பிரமணிய கோவிலின் தனிச்சிறப்பாகும்-இங்கு காசி-ராமேஸ்வரத்துக்கு அடுத்தபடியாக ஆண் மருதமரமும் - பெண் மருதமரமும் ஒரே இடத்தில் அமைத்துள்ளதால் புண்ணிய காரியங்கள் செய்ய மக்கள் விரும்பிவரும் ஸ்தலமாக உள்ளது -



 *குச்சனூர் சனீஸ்வரன் கோவில்:* 

 *இந்துமத வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நவக்கிரகங்களில் ஒன்றாகவும், சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோவிலாகவும் கொண்டு எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவான் தமிழகத்தில் தனக்கென தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒரே இடம் குச்சனூர்தான்.* 

 *தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபிநதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் இந்தக் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்திருக்கிறது.* 
 *சனி தோசம் உடையவர்கள் இந்தக் கோவிலிற்கு வந்து மனமுருக வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு வரும் சோதனைகள் நீங்கி வாழ்க்கையில் வளம் பெற முடியும். தற்போது இந்தியாவின் பிற பகுதிகளிலிலிருந்தும், இலங்கை, சிங்கப்பூர், நேபாளம் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இந்து சமய நம்பிக்கையுடையவர்கள் இந்த சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.* 

 *வீரபாண்டி கண்ணீசுவரமுடையார் கோயில்:* 

 *தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி எனும் ஊரில் கண்ணீசுவரமுடையார் கோயில் அமைந்திருக்கிறது.*

 *தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயில் சிவபெருமானுக்குப் புகழ் சேர்க்கும் பல கோயில்களில் ஒன்றாகும்.* 

 *சிறப்புகள்:* 
 *கண்ணீசுவரமுடையார் கோயிலில் கண்ணீசுவரமுடையார் மற்றும் உடனிருக்கும் அம்மனாக அறம் வளர்த்த நாயகி இருக்கிறார். பாண்டிய மன்னனுக்குக் கண் பார்வை தந்த இந்தக் கோயிலில் வணங்கிச் செல்பவர்களுக்கு அனைத்து நோய்களும் நீங்கி விடும் என்று கருத்து இப்பகுதி மக்களிடையே இருக்கிறது.* 

 *இந்தக் கோயிலின் தீர்த்தமாக கோயிலுக்கு அருகே ஓடும் முல்லை நதியின் நீர் பயன்படுத்தப்படுகிறது. இந்த நீர்தான் அபிசேகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கோயில் குறித்த தகவல்கள் சின்னமனூர் அரிகேசரி நல்லூர் தல புராணத்தில் பதினான்காம் படலத்தில் இடம் பெற்றிருக்கிறது.* 

 *இந்தக் கோயிலில் இந்தப் பகுதி மக்களில் பெரும்பான்மையாகத் திருமணம் செய்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.* 

 *வீரபாண்டி கௌமாரியம்மன்கோயில் தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி எனும் ஊரில் கௌமாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது.*

 *தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயில் மாரியம்மனுக்கான பல கோயில்களில் ஒன்றாகும்.* 

 *சிறப்புகள்* 

 *பாண்டிய மன்னனுக்குக் கண் பார்வை தந்த இந்தக் கோயிலில் வணங்கிச் செல்பவர்களுக்குஅம்மை மற்றும் கோடைக்கால அனைத்து வெப்ப நோய்களும் நீங்கி விடும் என்கின்றனர். கோயிலின் தீர்த்தமாக கோயிலுக்கு அருகே ஓடும் முல்லை நதியின் நீர் பயன்படுத்தப்படுகிறது.*

 
 *கோயில் குறித்த தகவல்கள் சின்னமனூர் அரிகேசரிநல்லூர் தல புராணத்தில் பதினான்காம் படலத்தில் இடம் பெற்றிருக்கிறது.* 

 *கோயில் கோபுரத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகளான மகாத்மா காந்தி, கஸ்தூரிபா காந்தி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோரது உருவச் சிலைகள் கோபுரத்தில் இடம் பெற்றுள்ளன.* 

 *தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்:* 

 *தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் தேவதானப்பட்டியில் அமைந்துள்ளது மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில். தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இக்கோயில் தேனி மாவட்டத்தின் முக்கியக் கோயில்களில் ஒன்று.* 

 *சிறப்புகள்:* 

 *கோயிலில் அடைத்த கதவிற்கு முன்பாகவே பூசை செய்யப்படுகிறது.கோயிலின் குச்சுவீடு கலசம் (கர்ப்பகிருக கலசம்) தரிசனம் சிறப்பான ஒன்றாக உள்ளது.*

 
 *அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் தேங்காய் உடைக்கப்படுவதில்லை. பழம் உரிக்கப்படுவதில்லை.அன்ன நைவேத்தியம் செய்யப்படுவதில்லை.கோயிலில் நெய்விளக்கு தீபம் மட்டுமே ஏற்றப்படுகிறது.* 

 *கோயிலில் விளக்குக்காகப் பக்தர்களிடம் காணிக்கையாகப்பெறப்படும் நெய் இங்குள்ள மண்பானைகளில் ஊற்றி வைக்கப்படுகின்றன.இந்த நெய்யிற்கு எறும்பு, ஈ,வண்டு என்று எதுவும் வருவதுமில்லை,மொய்ப்பதும் இல்லை. வருடத்திற்கு ஒருமுறை கோயிலின் குச்சு வீடு கலசத்திற்குக் கூரை வேயப்படும் போது ராஜகம்பளம் சாதியினர் தங்கள் கண்களைத் துணியால் கட்டிக் கொண்டுதான் காமாட்சிப் புல்லால் கூரை வேய்கின்றனர்.*

 
 *காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் போன்றே இங்கும் பூசை மண்டபத்தின் முன்பு கௌளி சின்னம் (பல்லியின் சின்னம்) பொறிக்கப்பட்டுள்ளது. இங்கும் கௌளி குறி கேட்டல் முக்கியமான ஒன்றாக உள்ளது.* 

 *சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில்:* 

 *தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்திலிருக்கும் சின்னமனூர் எனும் ஊரிலிருக்கும் பூலாநந்தீசுவரர் கோயில் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த சிவத்தலங்களில் ஒன்றாகும்.*

 *உயர்ந்த சிவத்தலம் எது? என்று கேட்ட நைமிசாரண்ய முனிவர்களுக்கு சூதமா முனிவர், பதினெண் புராணங்களில் ஒன்றான கந்த புராணத்தில் சங்கர சங்கிதையில் கூறிய சிவத்தலங்களில் சிறந்த தலம் பூலாவனமாகும் என்று சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில் குறித்து குறிப்பிட்டிருக்கிறார்.*

 
 *இராணி மங்கம்மாள் காலத்தில் சின்னமநாயக்கர் என்ற அரசியல் அதிகாரி இவ்வூரை உருவாக்கியதால் அவர் பெயரால் சின்னமனு}ர் என்று பெயர் மாற்றம் ஏற்பட்டதாக மதுரை மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்று கூறுகிறது.*

 *புராணத்தில் இந்த ஊர் அரிகேசரி நல்லூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.*
 
 *கோயிலின் அமைப்பு சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயிலுக்குள் நுழைந்தவுடன் கொடிமரம், அதற்கடுத்து நந்தி பகவான் அதற்கடுத்து மண்டபம் ஆகியவைகளைக் கடந்து பூலாநந்தீசுவரர் சன்னதி அமைந்துள்ளது.*

 *இக்கோயிலின் இடது புறம் சிவகாமி அம்மன் கோயிலும் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் சந்திரசேகரர், காங்காளர், சுப்பிரமணிய சுவாமி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, காளி, பைரவர் போன்ற துணைத் தெய்வங்களுக்கும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.*
 
 *கோயிலின் வலதுபுறம் நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் கிழக்குப் பகுதியில் திருமால் வேண்டுகோளுக்காக சிவபெருமான் உருவாக்கிய சிவகங்கைத் தீர்த்தம் எனப்படும் குளம் உள்ளது.*
 
 *இக்கோவிலை போடிநாயக்கனூர் ஜமீன் திருமலை பங்காரு முத்து நாயக்கர் என்பவர் கட்டுவதற்கு உதவியுள்ளார். இக்கோவில் திருப்பணிக்காக நிலங்களைத் தானமாக வழங்கியுள்ளார்.* 

 *சிறப்புகள்:* 

 *இந்தியாவில் முக்தி கொடுக்கும் தலங்கள் ஐந்து உள்ளன.1.காசி, 2. திருவண்ணாமலை, 3.சிதம்பரம், 4. திருவாரூர், 5. அரிகேசரிநல்லூர். இவற்றில் அரிகேசரி நல்லூரே சிறந்தது.*
 
 *அரிகேசரிநல்லூரில் வசிக்கும் போது அபுத்திப்பூர்வமாக சுரபி நதியில் மூழ்கினாலும், அபுத்திப் பூர்வமாக வேடிக்கை பார்ப்பது போல அரிகேசரி நாதர் சன்னதியில் நின்றாலும் அவர்களுக்கெல்லாம் முக்தி சித்திக்கும்.* 

 *தேனி - அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில்:* 

 *வீரப்ப அய்யனார் கோயில் தமிழ்நாடு, தேனி-அல்லிநகரம் நகராட்சிப் பகுதியில் அல்லிநகரத்திற்கு மேற்கே மலையடிவாரத்தில் மலையிலிருந்து வரும் வாய்க்கால் எனும் சிற்றாற்றின் கரையில் அமைந்துள்ளது.*

 *கோயில் சிறப்பான முறையில் கட்டப்பட்டிருந்தாலும் சுவாமியின் கருவறைக்கு மேல் மேற்கூரை அமைக்கப்படவில்லை.சுயம்பு தோற்றமாக உள்ள சுவாமி ஐயனார் சிவ அவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். பொதுவாக சுயம்புத் தோற்றத்திற்கு ஆகாய கங்கை அபிஷேகமே சிறப்பு என்பதால் இங்கு சுவாமி கருவறையின் மேல்பகுதி கூரையில்லாமல் அமைக்கப்பட்டுள்ளது.* 

 *போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில் போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில்*

 *தேனி மாவட்டம், போடிநாயக்கனு}ர் நகரின் மேற்குப்பகுதியில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மேற்குமலை தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ள ஒரு சிவன் கோயில். நகரிலிருந்து இக்கோவிலுக்கு வரும் வழியில் சீரடி சாயி பாபா கோவில் மற்றும் ஆதிபராசக்தி சக்தி பீடம் கோவிலும் உள்ளது.* 

 *2007 ஆம் ஆண்டு திருப்பணிகள் செய்து பெருந் திருக்குடமுழுக்கு (மகா கும்பாபிசேகம்) நடத்தப்பட்டது. இம்மலைக்கோவிலின் ஆண்டுத் திருவிழா சித்திரை மாதத்தில் ஏழு நட்கள் நடைபெறுகிறது.* 

 *தீர்த்தத்தொட்டி சித்திர புத்திர நாயனார் கோயில்*

 *தமிழ்நாடு தேனி மாவட்டம் தீர்த்தத் தொட்டியில் அமைந்திருக்கும் சித்திர குப்தருக்கான கோவிலாகும். தமிழ்நாட்டில் சித்திர புத்திர நாயனாருக்கு அமைக்கப்பட்டுள்ள ஒரு சில கோயில்களில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சித்திர புத்திர நாயனார் கோயிலுக்கு அடுத்து இரண்டாவது சிறப்பு மிக்க கோயில் இது.* 

 *தல புராணம்:* 

 *தீர்த்தத் தொட்டிக்கு அருகே இருக்கும் ஊரான கோடாங்கிப்பட்டியைச் சேர்ந்த ஒருவரின் கனவில் சித்திரகுப்தன் தோன்றினார்.*

 *அவ்வாறு தோன்றியவர் தனக்கான கோயிலொன்றை கட்டி வழிபடுமாறு கூறினார். அதன் காரணமாக இக்கோவில் இங்கு எழுப்பப்பட்டுள்ளது.* 

 *விழாக்கள்:* 

 *அனைத்து மாதங்களிலும் சித்திரை நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடு.சித்திரை மாதத்தில் வருகின்ற சித்ரா பௌர்ணமி நாளில் சிறப்பு வழிபாடு மற்றும் விழா நடைபெறும்.தேனி மாவட்டத்தின் வேளாண்ம கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியான சுருளி மலைச் சாரல் பகுதியில் பல ஏக்கர் நிலங்களில் திராட்சைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டு திராட்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.*

 *இங்கு உற்பத்தி செய்யப்படும் திராட்சை பழங்கள் தமிழ்நாடு தவிர அருகிலுள்ள கேரளா,கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. போடி மெட்டின் முக்கிய விளைபயிராக ஏலக்காய், தேயிலை மற்றும் குளம்பிக்கொட்டை பயிரிடப்படுகிறது.* 

 *கூடலூர் பகுதியில் கேப்பை,சாமை, காணம் போன்ற பயிர்கள் விளைகிறது.* 

 *தேனி-அரசியல்வாதிகள்:* 

 *தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சில முக்கிய அரசியல்வாதிகள் (ஒருசிலர்) மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.*
 
 *பி.டி.ராஜன்- நீதிக்கட்சித் தலைவர்,சென்னை மாகாண முதலமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் - முன்னாள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர், முன்னாள் தமிழ்நாடு அரசு அமைச்சர்(தி.மு.க)பெ.செல்வேந்திரன் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி, (தி.மு.க) ஓ.பன்னீர்செல்வம் - முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு அரசு நிதியமைச்சர் (அ.இ.அ.தி.மு.க)* 

 *திரைப்படத் துறையினர்:* 

 *தேனி மாவட்டத்தில் பிறந்த திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்(எஸ்.எஸ்.ஆர்), மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன், மறைந்த நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் தனுஷ் ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், பாரதிராஜா, கஸ்தூரி ராஜா, பாலா,டாக்டர் ராஜசேகர் மற்றும் செல்வராகவன் ஆகியோர் இயக்குநர்களாகவும்,இளையராஜா, கங்கை அமரன், யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா மற்றும் பவதாரிணி ஆகியோர் திரை இசைத் துறையிலும், கவிஞர் வைரமுத்து, கவிஞர் நா.காமராசன் மற்றும் கவிஞர் மு.மேத்தா ஆகியோர் கவிஞர்களாகவும் புகழ் பெற்றவர்களாக உள்ளனர்.* 

 *எழுத்தாளர்கள்:* 

 *தேனி மாவட்டத்தில் இருந்து அந்தோணிமுத்து புலவர், சி.சு.செல்லப்பா, வே. தில்லைநாயகம், க.அருணாசலம், கவிஞர் வைரமுத்து, கவிஞர் நா.காமராசன், கவிஞர் மு.மேத்தா, உமா மகேஸ்வரி, கவிஞர் சக்தி ஜோதி, தேனி மு. சுப்பிரமணி, தேனி.எஸ்.மாரியப்பன் கவிஞர். கவி கருப்பையா  பல எழுத்தாளர்கள், கவிஞர்கள் உருவாகியிருக்கின்றனர்.*


கட்டுரை -  திரு.இளையராஜா_
நிருபர் எம்.சேதுராமன்
Previous Post Next Post