தஞ்சாவூர். ஜூலை.31 தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் திறன் வளர்ப்பு பட்டய வகுப்பு சான்றிதல் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் 196 பேருக்கு திறன் வளர்ப்பு பட்டய வகுப்பு சான்றிதழ்கள்.

தஞ்சாவூர். ஜூலை.31 தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் திறன் வளர்ப்பு பட்டய வகுப்பு சான்றிதல் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

யாவரும் கேளீர் திறன் வளர் சங்க செ.இளந்தமிழன் வரவேற்புரையாற்றினார். யாவரும் கேளீர் திறன் வளர் சங்க தலைவர் மா.மனோஜ்குமார் அறிமுக உரையாற்றினார். தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் செ.காயத்ரி சிறப்புரையாற்றினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்பதிவாளர் சி.தியாகராஜன் தலைமை உரையாற்றினார். பேச்சாளரும் நகைச்சுவை நடிகருமான முனைவர் கோ.பழனி வாழ்த்துரையாற்றினார். யாவரும் கேளீர்திறன் வளர்சங்க 16 வகுப்புகளில் பயின்ற 196 பேருக்கு பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் செ.காயத்ரி,தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழக பதிவாளர் சி.தியாகராஜன் ஆகியோர் பட்டய வகுப்பு சான்றிதல்களை வழங்கினார்கள். இதில் கம்பன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாணவி சி. சௌந்தர்யா, அரகண்டநல்லூர், விழுப்புரம் மாவட்டம் ஆகியவர்க்கு நான்கு பட்டைய வகுப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.யாவரும் கேளீர் திறன் வளர்ப்பு பொருளாளர் லோ.கெளரிராஜ் நன்றியுரையாற்றினார்.
Previous Post Next Post