ராணிப்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சியின் 14ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம்
பிஜேபி சர்வாதிகார ஆட்சி
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் எஸ்டிபிஐ கட்சியின் 14ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் ராணிப்பேட்டை தொகுதி தலைவர் டி.எஸ் இமாம் அப்துல் கபூர் தலைமையில் நேற்று நடைபெற்றது இந்த விழாவிற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஏஜே.முஹம்மத் இலியாஸ்,
மாவட்ட துணைத்தலைவர் காஜா மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.கவுஸ் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர் சமூக ஊடக அணி மாவட்ட செயலாளர் எம்.தமிம் பாஷா வரவேற்புரையாற்றினார்,மாநில செயற்குழு உறுப்பினர்
ஒய்.பயாஸ் அஹமத் வாழ்த்துரை வழங்கினார் அதனைத் தொடர்ந்து வர்த்தக அணி மாநில தலைவர் கிண்டி எஸ்.அன்சாரி ,பாப்புலர்
ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முஹம்மத் ரபிக் ராஜா, மாநில பேச்சாளர் முஹம்மத் உசேன்
ஆகியோர் பாசிசத்தை மாய்ப்போம் ஜனநாயகத்தை காப்போம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்
அவர்கள் பேசியதாவது
இந்தியாவில் பாசிச சர்வாதிகார ஆட்சி நடந்து
கொண்டிருக்கிறது
இந்த ஆட்சியில் இந்தியா முழுவதிலும் உள்ள பொதுமக்கள் பயத்தினாலும் பட்டினியாளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் பட்டினியால் வாடும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 107 வது இடத்தை பெற்றிருக்கிறது இந்தியாவில் ஏராளமான மக்கள் பசியாலும், பட்டினியாலும் அனுதினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்
விலைவாசி உயர்வு விண்ணை தொடும் அளவுக்கு எட்டி இருக்கிறது நாம் அன்றாடம் உண்ணும் அரிசிக்கும் ஜிஎஸ்டி வரி போட்டுவிட்டனர் மோடி சொல்கிறார் இந்தியா வல்லரசு ஆகி விட்டது என்று முழக்கமிடுகிறார் இந்தியா பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்து இருப்பதாக ஐநா சபை சுட்டிக்காட்டி இருக்கிறது என்றனர் மேலும் இந்திய நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்டம் சர்வாதிகார ஆட்சியாளர்களால் முடக்கப்பட்டு வருகிறது
இந்திய அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தில் இந்திய மக்களாகிய நாம் என்று தான் துவங்குகிறது இந்தியா சாதி, சமயம், மதசார்பற்ற நாடு ஆனால் பிஜேபி அரசு நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற அனைத்து கட்சி உறுப்பினர்களுடன் விவாதிக்காமல் தன்னிச்சையாக சட்டம் ஏற்றுகிறது என்று குற்றம் சாட்டினர் ரமணா என்ற நீதிபதி ஆளுங்கட்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தில்
விவாதிக்காமல் தன்னிச்சையாக சட்டம் ஏற்றுவது தவறு என்று சுட்டிக்காட்டியதின் அடிப்படையிலும்,ஓய்வு பெற்ற நீதியரசர்கள், முன்னாள் ஆளுநர்கள் முன்னாள் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் சுமார் 108 பேர், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி நாடாளுமன்றத்தில் விவாதம் இல்லாமல் சட்டம் ஏற்ற தவறு என்று சுட்டிக்காட்டியதன் அடிப்படையிலும் மோடி சொல்லுகிறார் சட்டம் இயற்றும் போது நாடாளுமன்ற விவாதத்திற்கு கொண்டுவருவேன் ஆனால் 30 வார்த்தைகளைத் தவிர்த்து விவாதிக்க வேண்டும்
என்று பட்டியலிட்டு புத்தக வடிவில் வெளியிட்டு இருப்பதாகவும் நீதித்துறை காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து சர்வாதிகார ஆட்சி செய்து வருகிறார் மோடி என்று குற்றம் சாட்டினர் இந்தியாவில் ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிட்டது மோடி முஸ்லிம் வெறுப்பு அரசியலை கையில் எடுத்திருக்கிறார்
ஒரு இடத்தில் படுகொலை நடந்தது முஸ்லிம்கள் மீது குற்றம் சாட்டினார்கள் அதில் பின்புல விசாரணையில் பாஜக உறுப்பினர்கள் என்று தெரியவந்தது காஷ்மீரில் 2 இளைஞர்கள் ஏகே 47 ரக துப்பாக்கியுடன் பிடிபட்டனர் விசாரித்ததில் பாஜக கட்சியின் ஊடகவியலாளர்கள் என்பது தெரியவந்தது இப்படி குண்டுவெடிப்பு ஆயுதக் கலாச்சாரத்தை மோடி அரசு கையில் எடுத்திருக்கிறது பன்முகத்தன்மை கொண்ட இந்திய மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் பாதுகாப்பில்லை அனைத்து மதத்தினருக்கும் விரோதமாக இந்துத்துவா மோடி அரசு செயல்படுகிறது
இந்துக்கள் வேறு இந்துத்துவா வேறு இந்துக்கள் எங்கள் தொப்புள்கொடி உறவுகள் இந்துத்துவா கொள்கை வாதிகள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் காந்தியை சுட்டுக் கொண்றது இந்துத்துவா,அம்பேத்கரை காமராஜரை பிஜேபி அரசு இன்றைக்கு தூக்கி வைத்து கொண்டாடி நாடகமாடுகிறது ஒருபுறம் மறுபுறம் அம்பேத்கர் எழுதின சட்டத்தை அழிக்கப் பார்க்கிறது பிஜேபினர் காமராஜரை உயிரோடு கொளுத்த முயற்சி செய்தது நண்பர் வரலாறு ஆனால் அவர்களையெல்லாம் தலைவராக ஏற்றுக் கொண்டது
போல பாவனை செய்து நடிக்கிறார்கள் பொய்யை நிலை நாட்ட பார்க்கிறார்கள் நமது நாட்டில் பல்வேறு கட்சிகள் தோன்றியிருக்கிறது இந்தக் கட்சிகளின் கொள்கை கோட்பாடுகள் நோக்கமெல்லாம் மூடநம்பிக்கை ஒழிப்பு பல்வேறு சித்தாந்தங்களை கொண்டு செயல்பட்டு வந்தது ஆனால் அத்தனையும் தோல்வியிலேயே முடிந்தது பல்வேறு கட்சிகள் இந்திய அரசுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கிறது இந்தியா உலக நாடுகள் மகிழ்ச்சியின் பட்டியலில் 136 ஆவது இடத்தை பிடித்திருக்கிறது இந்தியாவில் மகிழ்ச்சியே இல்லை, மக்கள் மகிழ்ச்சியாக வாழவே இல்லை இந்திய மக்களின் மகிழ்ச்சி கேள்விக்குறி பட்டியலில் இருக்கிறது
மோடி அரசு புதிய கல்வி கொள்கையை உருவாக்கி இருக்கிறது அதில் அவரவரின் குல தொழில்களையே செய்ய வேண்டும் என்று திணிக்கிறது, மக்களாட்சித் தத்துவம் இன்றைக்கு குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன என்றனர் மேலும் அவர்கள் பேசுகையில் திமுக அரசு ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் பாதுகாவலன் என்றெல்லாம் சொல்லி முஸ்லிம்களின் ஒட்டுமொத்த ஓட்டுகள் வாங்கி ஏமாற்றியது முஸ்லிம்களுக்கு எந்த விதத்திலும் பாதுகாப்பாகயில்லை
ராணிப்பேட்டை மாவட்டம் விசாரம் பகுதி சாதிக் பாஷா நகரில் 300க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கினர் அப்பொழுது ஓட்டு வாங்கிய எந்த எம்பியும், எம்எல்ஏவும், ஜமாத்தும் வந்து நிற்கவில்லை எஸ்டிபிஐ கட்சியினர் மட்டுமே வந்து நின்றது ஆட்சி மாறியது காட்சிகள் இன்னும் மாறவில்லை என்றனர்
எஸ்டிபிஐ கட்சிக்கு சாதி மதம், இனம்,மொழி, எதுவும் கிடையாது யார் வேண்டுமானாலும் இதில் உறுப்பினராகி மக்கள் பணி செய்யலாம் பாசிச சர்வாதிகார ஆட்சியை அகற்றுவதற்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் பவுத்தம், சீக்கியர்கள் இப்படி நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டு,
பிஜேபி அரசை தூக்கி எறிய வேண்டும் மோடி சொல்கிறார் பிஜேபி அரசு 30 ஆண்டுகள் 2052 வரை எங்களுடைய ஆட்சி நீடிக்கும் என்கிறார்கள் பிஜேபின் சகாப்தம் முடியும் நாட்கள் நெருங்கி விட்டது அது முடியும்போது எஸ்டிபிஐ கட்சியின் ஆட்சியின் காலம் தொடங்கும் மேலும் அவர்கள் பேசுகையில் எந்த நாட்டில் ஆறுகள் ஓடினாலும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரும் ஆனால் எகிப்து நாட்டில் மட்டும்தான் நைல் நதி என்னும் ஆறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்கிறது அதே போல தான்
தென்னிந்தியர்கள் வெறுக்கும் மோடி அரசு தெற்கிலிருந்து ஒரு நதி புறப்பட்டுவிட்டது அது எஸ்டிபிஐ கட்சி, இந்திய மக்களாகிய அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றிணைந்து தும்பளை போல மோடி அரசை விரட்டி கைபர் போலன் கணவாய் வழியாக ஓட விட வேண்டும் அதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர்
இவ்வாறு அவர்கள் பல்வேறு கருத்துக்களை பேசினர் இந்த நிகழ்ச்சியில் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் ராணிப்பேட்டை நகர தலைவர் எம் அத்திக் பாஷா நன்றி உரையாற்றினார்.