சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்வதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை வென்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி RTI-துறையின் மாநில தலைவர்,மூத்த வழக்கறிஞர் .C.கனகராஜ் BA.,BL அவர்களும் மாநில பொதுச்செயலாளர் மட்டும் மாவட்ட தலைவர் ஸ்டீபன் முத்துப்பாண்டி அவர்களும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நடராஜர் கோவில் தீட்சதர்களை சந்தித்து தமிழ்நாடு அரசு அறநிலைத்துறை உடனும் பக்தரிடம் சுமுகமாக நடந்து கொள்ளவும், அரசிடம் கணக்கு வழக்குகளை வெளிப்படையாக காட்டவும் கூறிக்கொண்டு தகவல் அறியும் உரிமைச்சட்டம் சார்பாக மாநிலத் தலைவர் அவர்கள் மனு அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கடலூர் மாவட்ட மூத்த துணைத் தலைவர் ஜெமினி ராதா, சம்பந்தமூர்த்தி, ஜெயச்சந்திரன், செல்வகுமார், செந்தில்குமார், தில்லை ராஜா, வீரக்குமார், சுந்தர்ராஜன், மணிரூபன், குருமூர்த்தி, ரகோத்தமன், ரஞ்சித், மகிபாலன், கார்த்திக், அருணகிரி, ஜெகதீசன், விஜயகுமார், வசந்த் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.