ராணிப்பேட்டை மாவட்டம்
13-6-22
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைதலைவர் ராகுல் காந்தி மத்திய அமலாக்கத்துறை முன்பு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டதை கண்டித்து - காங்கிரஸ் மாநில செயலாலர் ஒரே ஆளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்
ராணிப்பேட்டை மாவட்டம்ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மத்திய அமலாக்கத்துறை முன்பு ஆஜராக வேண்டும் என சம்மன் வழங்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு மற்றும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் மாநில காங்கிரஸ் கட்சி செயலாளர் அக்ரஹாரம் பாஸ்கர் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்திக்கு வழங்கப்பட்டுள்ள சம்மன் கடிதத்தை எதிர்த்தும் அதனை கண்டிக்கும் விதமாகமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கையில் மோடி அரசை கண்டித்து வாசகங்கள் எழுதிய பலகை ஏந்தியவாறு தரையில் அமர்ந்து ஒரே ஆளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியனை சந்தித்து மத்திய அரசின் பொய்யான விசாரணைக்கு வரவேண்டுமென வழங்கப்பட்டுள்ள சம்மன் குறித்து கண்டனம் தெரிவித்து பாஜக அரசுக்கு எதிராக மனுவினையும் வழங்கினார்
செய்தியாளர்
எஸ்.ஆனந்தன்