குமராட்சியில் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு தையல் மிஷினை ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் வழங்கினார்
குமராட்சி கிராமத்தில் வசிக்கும் குணசேகரன் வெண்ணிலா இவர்களின் மகள் ஷர்மிளா மாற்றுத்திறனாளி ஆவார் இவருக்கு பல வருடங்களாக வரன் பார்த்து கொண்டு வந்தனர் இந்நிலையில் சேத்தியாதோப்பை சேர்ந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி ஆன உமாநாத் என்பவருக்கு சம்பந்தம் பேசி இருந்தனர் பெண்ணின் பெற்றோர்கள் அரசு வழங்கக்கூடிய திருமண தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்திய படியால் திருமண செலவிற்கு பணம் இல்லாமல் தவித்து வந்தனர் பிறகு சேத்தியாத்தோப்பு தீ பாயந்தாள் அம்மன் கோவிலில் சென்று மணமக்கள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டு திருமணத்தை முடித்து கொண்டனர் மணமக்களை வாழ்த்த சென்ற குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் அவர்களிடம் மணமக்கள் எங்களைப் போல் உள்ள மாற்றுத்திறனாளிக்கு மட்டுமாவது அரசு வழங்கி வந்த திருமண உதவி தொகையினை வழங்கிட தமிழக முதல்வர் அவர்களுக்கு உங்கள் மூலமாக இச்செய்தியை தெரிவியுங்கள் என கேட்டுக்கொண்டனர் பிறகு தலைவரிடம் எங்கள் அன்றாட வாழ்வாதாரத்திற்கு ஒரு உதவி செய்யுங்கள் என கேட்டுக்கொண்டனர் தலைவர் என்ன வேண்டும் எனக் கேட்டதற்கு தையல் மெஷின் ஒன்று வாங்கி தாருங்கள் என்று கேட்டனர் உடனடியாக தையல்மிஷினை வாங்கிக்கொண்டு வந்து மணமக்கள் இடம் கொடுத்து மணமக்களை வாழ்த்தி சென்றுள்ளார் உடன் வார்டு உறுப்பினர் ராஜமலையசிம்மன் காங்கிரஸ் கட்சியின் மூத்த பொறுப்பாளர் அன்பழகன் மற்றும் பெண்ணின் பெற்றோர்கள் உடன் இருந்தனர்