ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர்கள் ஆய்வு
ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தமிழ்நாடு
சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.
காந்தி ஆய்வு செய்தனர்
ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை தோல் பதனிடும் தொழிற்சாலை பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய நிறுவனத்திற்கு நிறுவனத் தலைவர்
ஆர்.ரமேஷ் பிரசாரத்திற்கு கடந்த ஜூன் 4-ஆம் தேதி தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் பசுமை முதன்மையாளர் விருது வழங்கி பாராட்டினார்
அதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தமிழ்நாடு
சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன்,நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த நிகழ்வின்போது கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆர் காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்
நிகழ்ச்சியின் தொடர்சியாக வாலாஜா தேசிய நெடுஞ்சாலை அம்மனந்தாங்கள் கிராமத்தில் அமைந்துள்ள
தென்னிந்திய தோல் பதனிடுபவர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம், கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்
இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன், அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர்
தெ ..பாஸ்கர் பாண்டியன், ஆற்காடு எம்எல்ஏ ஜே.எல். ஈஸ்வரப்பன் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவித்தனர் இந்த நிகழ்வின்போது ராணிப்பேட்டை பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய தலைவர்
ஆர்.ரமேஷ் பிரசாத்,
இயக்குனர் சி.எம். ஜபருள்ள,மனிதவள மேலாளர் லோகநாதன், பொது மேலாளர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர் மேலும் தென்னிந்திய தோல் பதனிடுபவர்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.