அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம். ஐம்பெரும் விழா.
சங்கத்தின் ஐம்பெரும் விழாவான இரண்டாம் ஆண்டு விழா, நூல்கள் வெளியீட்டு விழா, விருதுகள் வழங்கும் விழா, மரக்கன்று நடும் விழா,நறுமலர் மாத மின்னிதழ் வெளியீட்டு விழா எனும் ஐம்பெரும் விழா திண்டிவனம் கே .ஆர். எஸ். அம்மா மகாலில் நடைபெற்றது. விழாவில் அனைத்துலக பொங்குதமிழ் சங்கத்தின் தலைவர் பண்ணுருட்டி பாவலர் சுந்தர பழனியப்பன் தலைமை வகித்தார். விழாவில் மேலாண்மை செயலாளர் திருநெல்வேலி கவிஞர் பாப்பாகுடி முருகன் அவர்கள் தமிழ் வாழ்த்து பாடல் பாடினார். அறங்கு நிறைந்த சான்றோர் பெருமக்கள் தமிழ் தாய் வாழ்த்து பாடலை பாடினார்கள் மாண்புடை மகளிர் பெருமக்கள் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்கள். முதலாவதாக திண்டிவனம் சரளி இசை கலைக்கூடத்தின் மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது. நிர்வாக செயலாளர் கோவை கவிஞர் இராஜேஸ்வரி முதன்மை செயலாளர் கரூர் கவிஞர் தமிழ்மணி மேலாண்மை செயலாளர் திருநெல்வேலி பாப்பாகுடி கவிஞர் முருகன் கொள்கைவிளக்க செயலாளர் காரைக்குடி முனைவர் அ.பாரதி ராணி மக்கள் தொடர்பு செயலாளர் வேலூர் முனைவர் ஞா. சுஜாதா தனித்தமிழ் மேம்பாட்டு செயலாளர் திருவள்ளூர் கவிஞர் ச.மா மாசிலாமணி மொழியில் மேம்பாட்டு செயலாளர் திருச்சி முனைவர் ம்.ரூபி அணன்சியா முத்தமிழ் மேம்பாட்டு செயலாளர் பண்ணுருட்டி கவிஞர் பாண்டு இலக்கிய மேம்பாட்டு செயலாளர் தர்மபுரி கவிஞர் தகடூர் தமிழ்க் கதிர் நெறியாள்கை செயலாளர் சின்னசேலம் கவிஞர் சுமதி சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைத்துலக பொங்கு தமிழ் சங்கத்தின் பொருளாளர் நல்லாசிரியர் மதிப்புறு முனைவர் கவிஞர் பொன்.ஆதவன் வரவேற்புரை நிகழ்த்தினார். செயலாளர் முனைவர் இரா. ஹேமலதா தொடக்க உரை நிகழ்த்தினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் சீதாபதி சொக்கலிங்கம் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் அவர்களின் பெயரன் பாவலர் இரா.அ.பழனியப்பன் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வழித்தோன்றல் பாவலர் உமாபாரதி ராஜலட்சுமி கல்வி அறக்கட்டளை & சத்வா வியாபார குழுமத்தின் நிறுவனர் இலக்கிய வள்ளல் சந்தானம் அய்யங்கார் திண்டிவனம் ஆர்யாஸ் ஹோட்டல் உரிமையாளர் தொழிலதிபர் இலக்கிய வள்ளல் இராமகிருஷ்ணன் கவிஞரேறு வாணிதாசன் அவர்களின் பெயர்த்தி நல்லாசிரியர் பாவலர் வளர்மதி முருகன் திண்டிவனம் அம்மா மஹால் உரிமையாளர் நல்லாசிரியர் கே. ஆர். எஸ். மணிகண்டன் பண்ருட்டி செந்தமிழ் சங்கத்தின் செயலாளர் நாவலர் சொ. முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கத்தின் சார்பில் " பொங்குதமிழ் செம்மல்" என்ற விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
விழாவில் பெண்மையின் பெருமை கூறும் மகளிர் பெருமக்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரை தொகுப்பான மாண்புடைய மகளிர் பாரதியாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆய்வாளர்களின் கட்டுரை தொகுப்பான "பாரதி (தீ) " பாவலர் சுந்தர பழனியப்பன் அவர்களின் அகவை திருநாள் கவிதை தொகுப்பான "கவிமாலை " முனைவர் கா. அரிகிருஷ்ணன் (எ) ரெட்டணை நாராயணகவி எழுதிய" ஸ்ரீ திரௌபதியம்மன் பிள்ளைத்தமிழ்" பன்முக கவிஞர் சின்னசேலம் சுமதி சிவக்குமார் அவர்கள் எழுதிய "மதியின் மதி" சித்திரை நிலவே தாய் மொழிதினக்கவிதை தொகுப்பான "கவிமலர்கள்" ஆகிய நூல்கள் வெளியீட்டு சிறப்பிக்கப்பட்டது.
மாண்புடை மகளிர் கட்டுரைத் தொகுப்பில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரை எழுதிய 60 ஆய்வாளர் பொதுமக்களுக்கு மாண்புடைய மகளிர்-2022எனும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது விழாவினை சிறப்பாக பொருளாளர் நல்லாசிரியர் பொன். ஆதவன் அவர்களும் தகவல் தொழில்நுட்ப செயலாளர் முனைவர் அரிகிருஷணன் அவர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
தகவல் தொழில்நுட்ப செயலாளர் அரிகிருஷ்ணன் அவர்கள் கூற விழா இனிதே நிறைவடைந்தது .