தேனி மாவட்டத்தில் பொது தேர்வு தேர்ச்சி முடிவுகள் விபரம்
தேனி ஜூன் 21 தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்ட நிலையில் தேனி மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவ மாணவியர்கள் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 94. 39 சதவீதமும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 89 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர் தமிழ்நாடு முழுவதும் எழுதினர் இதில் தேனி மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 7090 மாணவியர்களும் 6943 மாணவர்களும் மொத்தம் 14 ஆயிரத்து 33 மாணவ மாணவியர்கள் எழுதினர் இத்தேர்வில் 6603 மாணவர்களும் 6 503மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94. 39% ஆகும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு தேனி மாவட்டத்தில் 7857 மாணவர்களும் 7
246 மாணவிகளும் எழுதினர் இதில் தேர்வு முடிவில் 6605 மாணவர்களும்6837 மாணவியர்களும் எழுதி தேர்ச்சி பெற்றனர் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 140 க்கும் மேற்பட்ட மையங்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டனர் இன்று வெளியாகியுள்ள தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது